தன் மதிப்பீடு : விடைகள் - II

 

2)

‘காதல்’ பற்றிய கவிஞர் கண்ணதாசனின் கருத்துகளுக்குச் சான்று தருக.

மாங்கனியின் கண் சுழற்சியில் அகப்பட்ட தலைவன். காதல் சுமையை இறக்கி வைக்க இயலாமல் நெஞ்சம் சோர்ந்ததாக,

தலையிருக்கும் பாரத்தை இறக்கிவைக்க
வழியிருக்கும் சாலைதனில்; ஆனால் காதல்
குலையிருக்கும் நெஞ்சத்தின் பாரமொன்றும்
குறையாதென்று அரற்றினான் கொற்ற வீரன்

என்றும்,

மாங்கனி என்றான் வீரன்; மாங்கனி காதல் மீறித்
‘தாங்குவீர்’ என்றாள்! தாங்க, தளிர்க்கொடி சுற்றிக்
             கொண்டாள்’

என்றும் காதல் பற்றிய நிகழ்வுகள் குறிப்பிடப்பட்டுள்ளன.



முன்