தன் மதிப்பீடு : விடைகள் - II

3)

தமிழ்ப் பெண்களின் கற்பின் சிறப்பினை மாங்கனி மூலமாக எவ்வாறு கவிஞர் போற்றியுள்ளார்?

நள்ளிரவு நேரத்தில் மாங்கனியைத் தேடி வந்த அடலேறுவைப் பார்த்துக் கோபமுடன்,

தீங்கு நினைவுற்றீரோ அமைச்சர் பிள்ளை,
தேவடியாள் குலந்தான் நான்; குணத்தில் அல்ல.

என்று, மாங்கனியின் மூலம் வெளிப்படுத்துகிறார். அதேபோல, மாங்கனியும் அடலேறுவும் இரவு முழுவதுமாகக் கொஞ்சிப் பேசி மகிழ்கின்றனர். இதனை,

விடியும் வரைக்கும் விலகவில்லை; தங்களிரு மெய்யும் துயிலவில்லை! ஆனாலும் அவ்விரவு களங்கப்படவுமில்லை.

என்று கற்பின் உறுதிப் பாட்டினைக் கவிஞர் வெளிப்படுத்துவதை உணர முடிகின்றது.



முன்