|
2.3 அகத்திணையியலும் அன்பின் ஐந்திணைகளும் |
|
அகத்திணை அன்பின் ஐந்திணை, கைக்கிளை,
பெருந்திணை எனப்படும் என்பதை முன்பே அறிந்தோம்.
அன்பின் ஐந்திணைகளாகிய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்,
பாலை ஆகியவற்றின் முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் ஆகியவற்றைக் காணலாம். |
|
|
|
2.3.1 குறிஞ்சித் திணை |
|
|
|
முதற்பொருள் |
|
|
|
நிலம் |
- |
மலையும் மலையைச் சார்ந்த இடமும் |
|
பொழுது |
- |
|
அ) பெரும்பொழுது - கூதிர்காலமும், முன்பனிக்காலமும் |
ஆ) சிறு பொழுது - யாமம் |
|
|
|
கருப்பொருள்கள் |
|
|
|
1. |
தெய்வம் |
- |
சேயோன் |
|
|
|
|
|
|
2. |
உணவு |
- |
ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி,
கிழங்கு |
|
|
|
|
|
|
3. |
விலங்கு |
- |
புலி, யானை, கரடி, பன்றி |
|
|
|
|
|
|
4. |
மரம் |
- |
அகில், ஆரம், தேக்கு, வேங்கை |
|
|
|
|
|
|
5. |
பறவை |
- |
கிளி, மயில் |
|
|
|
|
|
|
6. |
பறை |
- |
முருகியம், தொண்டகப் பறை |
|
|
|
|
|
|
7. |
தொழில் |
- |
தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை
விதைத்தல், வேட்டையாடுதல் |
|
|
|
|
|
|
8. |
யாழ் |
- |
குறிஞ்சி யாழ் |
|
|
|
|
|
|
9. |
பண் |
- |
குறிஞ்சிப் பண் |
|
|
|
|
|
|
10. |
ஊர் |
- |
சிறுகுடி, குறிச்சி |
|
|
|
|
|
|
11. |
நீர் |
- |
அருவி நீர், சுனை நீர் |
|
|
|
|
|
|
12. |
மலர் |
- |
காந்தள், வேங்கை, குறிஞ்சி |
|
|
|
உரிப்பொருள் |
|
|
|
புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்) |
|
|
|
2.3.2 முல்லைத் திணை |
|
|
|
முதற்பொருள் |
|
|
|
நிலம் |
- |
காடும் காட்டைச் சார்ந்த இடமும் |
|
|
|
|
|
பொழுது |
- |
அ) பெரும்பொழுது : கார்காலம் |
ஆ) சிறுபொழுது: மாலை |
|
|
|
கருப்பொருள்கள் |
|
|
|
1. |
தெய்வம் |
- |
மாயோன் |
|
|
|
|
|
|
2. |
உணவு |
- |
வரகு, சாமை |
|
|
|
|
|
|
3. |
விலங்கு |
- |
மான், முயல் |
|
|
|
|
|
|
4. |
மரம் |
- |
தோன்றி, காயா, பிடவம், குருந்தம் |
|
|
|
|
|
|
5. |
பறவை |
- |
காட்டுக்கோழி, சேவல் |
|
|
|
|
|
|
6. |
பறை |
- |
ஏறுகோட் பறை |
|
|
|
|
|
|
7. |
தொழில் |
- |
ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல் |
|
|
|
|
|
|
8. |
யாழ் |
- |
முல்லை யாழ் |
|
|
|
|
|
|
9. |
பண் |
- |
குறிஞ்சிப் பண் |
|
|
|
|
|
|
10. |
ஊர் |
- |
பாடி, சேரி |
|
|
|
|
|
|
11. |
நீர் |
- |
குறுஞ்சுனை, கான்யாறு |
|
|
|
|
|
|
12. |
மலர் |
- |
முல்லை, குல்லை, தோன்றி, பிடவம் |
|
|
|
|
|
|
உரிப்பொருள் |
|
|
|
இருத்தலும் இருத்தல் நிமித்தமும். |
|
|
|
2.3.3 மருதத் திணை |
|
|
|
முதற்பொருள் |
|
|
|
நிலம் |
- |
வயலும் வயல்சார்ந்த இடமும் |
|
|
|
|
|
பொழுது |
- |
அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும் |
ஆ) சிறுபொழுது - வைகறை, விடியல் |
|
|
|
கருப்பொருள்கள் |
|
|
|
1. |
தெய்வம் |
- |
இந்திரன் (வேந்தன்) |
|
|
|
|
|
|
2. |
உணவு |
- |
செந்நெல், கரும்பு |
|
|
|
|
|
|
3. |
விலங்கு |
- |
எருமை, நீர்நாய் |
|
|
|
|
|
|
4. |
மரம் |
- |
வஞ்சி, காஞ்சி, மருதம் |
|
|
|
|
|
|
5. |
பறவை |
- |
தாரா, நீர்க்கோழி |
|
|
|
|
|
|
6. |
பறை |
- |
மணமுழவு, நெல்லரி கிணை |
|
|
|
|
|
|
7. |
தொழில் |
- |
விதைத்தல், விளைத்தல் |
|
|
|
|
|
|
8. |
யாழ் |
- |
மருத யாழ் |
|
|
|
|
|
|
9. |
பண் |
- |
மருதப் பண் |
|
|
|
|
|
|
10. |
ஊர் |
- |
ஊர்கள் |
|
|
|
|
|
|
11. |
நீர் |
- |
ஆற்றுநீர், பொய்கை நீர் |
|
|
|
|
|
|
12. |
மலர் |
- |
தாமரை, கழுநீர் |
|
|
|
|
|
|
உரிப்பொருள் |
|
|
|
ஊடலும் ஊடல் நிமித்தமும். |
|
|
|
2.3.4 நெய்தல் திணை |
|
|
|
முதற்பொருள் |
|
|
|
நிலம |
- |
கடலும் கடல் சார்ந்த இடமும் |
|
|
|
|
|
பொழுது |
- |
அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும் |
ஆ) சிறுபொழுது - எற்பாடு |
|
|
|
கருப்பொருள்கள் |
|
|
|
1. |
தெய்வம் |
- |
வருணன் |
|
|
|
|
|
|
2. |
உணவு |
- |
மீன், உப்பு |
|
|
|
|
|
|
3. |
விலங்கு |
- |
உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும்
எருது), சுறா |
|
|
|
|
|
|
4. |
மரம் |
- |
புன்னை, ஞாழல், கண்டல் |
|
|
|
|
|
|
5. |
பறவை |
- |
அன்றில், அன்னம் |
|
|
|
|
|
|
6. |
பறை |
- |
மீன்கோட் பறை |
|
|
|
|
|
|
7. |
தொழில் |
- |
மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு
விளைவித்தல், நாவாய் ஓட்டல் |
|
|
|
|
|
|
8. |
யாழ் |
- |
நெய்தல் யாழ் |
|
|
|
|
|
|
9. |
பண் |
- |
நெய்தல் பண் |
|
|
|
|
|
|
10. |
ஊர் |
- |
பட்டினம், பாக்கம் |
|
|
|
|
|
|
11. |
நீர் |
- |
உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு |
|
|
|
|
|
|
12. |
மலர் |
- |
நெய்தல், கைதை (தாழை) |
|
|
|
|
|
|
உரிப்பொருள் |
|
|
|
இரங்கலும் இரங்கல் நிமித்தமும் |
|
|
|
2.3.5 பாலைத் திணை |
|
|
|
முதற்பொருள் |
|
|
|
நிலம் |
- |
பாலை நிலம் |
|
|
|
|
|
பொழுது |
- |
அ) பெரும்பொழுது - வேனிற் காலம்,
பின்பனிக் காலம் |
ஆ) சிறுபொழுது - நண்பகல் |
|
|
|
கருப்பொருள்கள் |
|
|
|
1. |
தெய்வம் |
- |
கொற்றவை |
|
|
|
|
|
|
2. |
உணவு |
- |
வழிப்போக்கரிடம் திருடிய உணவு |
|
|
|
|
|
|
3. |
விலங்கு |
- |
யானை, புலி, செந்நாய் |
|
|
|
|
|
|
4. |
மரம் |
- |
இருப்பை, உழிஞை |
|
|
|
|
|
|
5. |
பறவை |
- |
கழுகு, பருந்து, புறா |
|
|
|
|
|
|
6. |
பறை |
- |
சூறை கோட் பறை |
|
|
|
|
|
|
7. |
தொழில் |
- |
வழிப்பறி, சூறையாடல் |
|
|
|
|
|
|
8. |
யாழ் |
- |
பாலை யாழ் |
|
|
|
|
|
|
9. |
பண் |
- |
பாலைப் பண் |
|
|
|
|
|
|
10. |
ஊர் |
- |
பறந்தலை |
|
|
|
|
|
|
11. |
நீர் |
- |
கூவல் (கிணறு, குழி) |
|
|
|
|
|
|
12. |
மலர் |
- |
மரா, குரா |
|
|
|
|
|
|
உரிப்பொருள் |
|
|
|
பிரிதலும் பிரிதல் நிமித்தமும். |
|
|
|
இவ்வாறு வரும் திணைக் கருப்பொருள்கள் தத்தம் திணையில்
இடம்பெறுவதுடன் பிற திணையிலும் இடம் பெறுவதுண்டு.
அதற்குத் திணை மயக்கம் என்று பெயர். |
|
|
|
|