தெய்வம், உயர்ந்தோர், அல்லாதோர், பறவை, விலங்கு,
ஊர், நீர், பூ, மரம், உணவு, பறை, யாழ், பண், தொழில்
போன்றவை கருப்பொருள் ஆகும்.
முல்லைத் திணைக்குரிய தெய்வம்-திருமால்; மக்களுள்
உயர்ந்தோர் - குறும்பொறை நாடன், கிழத்தி; உயர்ந்தோர்
அல்லாதோர் - ஆயர், இடையர், ஆய்ச்சியர், இடைச்சியர்;
பறவை - கானக்கோழி; விலங்கு - முயல், மான்; ஊர் -
பாடி, சேரி; நீர் - காட்டாறு; பூ - முல்லை, தோன்றி;
மரம் - கொன்றை,
குருந்து, காயா; உணவு - வரகு, சாமை;
பறை - ஏறுகோட்பறை;
யாழ் - முல்லையாழ்; பண் -
சாதாரிப் பண்; தொழில் - சாமை,
வரகு விதைத்தல்,
ஆநிரை மேய்த்தல் போன்றவை.
|