2.6 தொகுப்புரை

நண்பர்களே! இப்பாடத்தில் குறிஞ்சித் திணைப் பாடல்களின் முப்பொருள் வெளிப்பாடு பற்றி அறிந்திருப்பீர்கள். குறிஞ்சித் திணையின் சிறப்புகளை அறிந்திருப்பீர்கள். இலக்கியச் சுவை பற்றி அறிந்து மகிழ்ந்திருப்பீர்கள்.

இந்தப் பாடத்திலிருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

குறிஞ்சித் திணையின் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் எவை என அறிந்துகொள்ள முடிந்தது; இம்மூன்று பொருள்களும் பாடல்களில் வெளிப்படுவதை அறிந்து கொள்ள முடிந்தது.

அறத்தொடு நிற்றல், வரைவு கடாவுதல், இற்செறிப்பு, இரவுக்குறி, குறிஞ்சியைப் போற்றல், குறிகேட்டல், தினைப்புனம் காத்தல் முதலிய குறிஞ்சித் திணையின் சிறப்புகளை அறிந்து கொள்ள முடிந்தது.

குறிஞ்சிப் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை, இறைச்சி ஆகிய இலக்கியச் சுவைகளைப் புரிந்து சுவைக்க முடிந்தது.

1)

எவ்விரண்டை இணைப்பது அறத்தொடு நிற்றல் ஆகும்?

(விடை)
2)

அகவன் மகள் யார்?

(விடை)
3)

யாருக்குத் தமிழின் பெருமையை எடுத்துச் சொல்லக் கபிலர் குறிஞ்சிப்பாட்டைப் பாடினார்?

(விடை)
4)

வரைவு கடாவுதல் என்றால் என்ன ?

(விடை)
5)

இற்செறிப்பு என்றால் என்ன?

(விடை)
6)

குறிஞ்சி மலர் எத்தனை ஆண்டுக்கு ஒருமுறை மலரும்?

(விடை)
7)

தலைவியின் கூந்தல் மணம் பற்றித் தலைவன் யாரை கேட்க்கிறான்?

(விடை)
8)

‘நிலத்தினும் பெரிதே’ என்ற பாடலைப் பாடியவர் யார் ?

(விடை)
9)

செம்புலப் பெயல்நீர் போலக் கலந்தவை எவை ?

(விடை)
10)

‘வள்ளைப் பாட்டு’ என்றால் என்ன?

(விடை)