மருதத் திணைக்கு உரிய கருப்பொருள்கள் பாடல்களில்
வெளிப்படும்
முறையைச் சில சான்றுகள் கொண்டு அறியலாம்.
தெய்வம்
இந்திரன்
இந்திர விழவில் பூவின் அன்ன
(ஐங்குறுநூறு -
62 :1)
(இந்திர விழவில் = இந்திரனுக்குச் செய்யப்படும்
விழாவில், பூவின் அன்ன = பூவைப் போன்ற)
மக்கள்
மகிழ்நன், ஊரன், உழவர்
எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின்தேரே !
(ஐங்குறுநூறு - 62 : 4)
(நின்றன்று = நின்றது)
கலிமகிழ் ஊரன்
(அகநானூறு - 146 :5, உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்)
(கலி = ஆரவாரம்)
வித்திய உழவர் நெல்லொடு பெயரும்
(ஐங்குறுநூறு - 3
: 4)
(வித்திய = விதைத்த)
பறவை
நாரை, நீர்க்கோழி
கயலார் நாரை போர்வில் சேக்கும்
(ஐங்குறுநூறு - 9
: 4)
(கயலார் = மீனை உண்ணும்; போர்வு
= நெற்போர்;
சேக்கும் = தங்கும்)
நீருறை கோழி நீலச் சேவல்
(ஐங்குறுநூறு
- 51 : 1)
(உறை = தங்கும்)
விலங்கு
எருமை
மருதத் திணைக்கு உரிய விலங்கான எருமையை மையமாக்கி
எருமைப் பத்து
என்ற தலைப்பில் ஐங்குறுநூற்றில்
பத்துப்பாடல்கள் உள்ளன.
கருங்கோட்டு எருமை (ஐங்குறுநூறு - 92 : 1)
(கோடு = கொம்பு)
ஊர்
மூதூர்
ஆதி அருமன் மூதூர் அன்ன
(குறுந்தொகை - 293
: 4, கள்ளில் ஆத்திரையன்)
(ஆதி = பழைமையான; அருமன்
= அருமன்
என்பவனுடைய)நீர்
பொய்கை
ஊர்க்கும் அணித்தே பொய்கை
(குறுந்தொகை - 113 : 1, மாதிரத்தன்)
(அணித்து = அருகில்)
பூ
தாமரை, ஆம்பல்
ஆம்பல்
தாமரைக்கு இறைஞ்சும் தண்துறை ஊரன்
(நற்றிணை - 300 : 3-4, பரணர்)
(இறைஞ்சும் = எதிரில் சாயும்; தண்துறை = குளிர்ச்சி
பொருந்திய நீர்த்துறை)
மரம்
காஞ்சி, மருதம்
காஞ்சி நீழல், தமர்வளம் பாடி
(அகநானூறு - 286 : 4, ஓரம்போகியார்)
(நீழல்
= நிழல்; தமர் = தம் சுற்றத்தார்)
மருதுஉயர்ந்து ஓங்கிய விரிபூம் பெருந்துறை
(ஐங்குறுநூறு
- 33 : 2)
(மருது = மருதமரம்; விரி
= பரந்த; பூம் = அழகான)
உணவு
நெல்
செந்நெல் அம்செறுவிற் கதிர்கொண்டு
(ஐங்குறுநூறு - 27 : 1)
(அஞ்செறு = அழகிய
வயல்)
இவை போன்றே பிற கருப்பொருள்களும் மருதத் திணைப்
பாடல்களில்
வெளிப்படுகின்றன. |