3.6 தொகுப்புரை

நண்பர்களே ! இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திப் பாருங்கள். இதுவரை மருதத் திணைப் பாடல்களின் முப்பொருள் வெளிப்பாடு பற்றி அறிந்திருப்பீர்கள். மருதத் திணையின் சிறப்புகளை அறிந்திருப்பீர்கள்; இலக்கிய நயங்கள் பற்றி அறிந்து மகிழ்ந்திருப்பீர்கள்.

பரத்தமை ஒழுக்கம், வாயில் மறுத்தல், புதுப்புனல் ஆடல், ஊடல் தணிதல், பிள்ளைத்தாலி அணிதல் முதலிய மருதத் திணையின் சிறப்புகளை அறிந்து கொண்டிருப்பீர்கள்.

மருதப் பாடல்களில் காணப்படும் கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய இலக்கிய நயங்களைப் புரிந்து கொண்டு.

1) மருதத் தலைவி ஊடல் கொள்ளக் காரணம் என்ன?
(விடை)
2) நின் மார்பு நயந்த நன்னுதல் அரிவை - இத்தொடரில் அரிவை யாரைக் குறிக்கிறது?
(விடை)
3) எழுநாள் அழும் பெண்டிர் யார்?
(விடை)
4) ஊடல் தீர யாருடைய மனநிலை காரணம் ஆகிறது?
(விடை)
5) தலைவனது தந்தையின் பெயர் கொண்டவன் யார்?
(விடை)
6) பரத்தை ஒருத்தி தலைவனின் மகனுக்கு எதனைக் கைக் காணிக்கை ஆக்குகிறாள்?
(விடை)
7) தலைவன் எதனை வெய்ய உவர்க்கும் என்றான்?
(விடை)
8) சிரல் பறவையைத் தலைவிக்கு உள்ளுறை உவமையாக்கிய புலவர் யார்?
(விடை)