இந்தப் பாடம் சங்க இலக்கியத்தில் அமைந்துள்ள
மருதத் திணைப் பாடல்களின் அறிமுகம் பற்றியது.
மருதத் திணைப் பாடல்களின்
முதற்பொருள், கருப்பொருள்,
உரிப்பொருள் ஆகியவற்றை இப்பாடம் விவரிக்கிறது.
மருதத் திணை உரிப்பொருளாகிய ஒழுக்கத்தின்
முக்கிய இயல்புகளை எடுத்துரைக்கிறது.
மருத நில மக்களின் சிறப்பியல்புகளை இப்பாடம்
விளக்குகிறது.
கற்பனை, சொல்லாட்சி, உவமை, உள்ளுறை ஆகிய
இலக்கிய நயங்களையும்
இப்பாடம் விளக்குகிறது.
|