4.5 வரலாற்றுக்
காப்பியம்
இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள், செவிவழிச் செய்திகள் யாவும் அவரால் உற்று நோக்கி அறியப்பட்டுள்ளன. நன்கு அறிந்து தெளிந்த உண்மைகளை மட்டுமே இவர் பதிவு செய்கிறார். கற்பனைப் பதிவுகளில் இவருக்கு நாட்டம் இருக்கவில்லை. பூகோள அறிவும், காலக்கணக்குகளும், நில இயல்புகளும் இயற்கை அமைப்புகளும் மிகத் துல்லியமாக இந்நூலுள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, பெரியபுராணத்தை ஒரு வரலாற்றுக் காப்பியமாகக் கொள்ள முடிகிறது. வரலாற்றுக் காப்பியம் என்பதற்கு ஏற்பச் சேக்கிழார் இந்நூலுள் பல வரலாற்றுச் செய்திகளை உள்ளவாறு பதிவு செய்துள்ளார். 1. ஆதித்த சோழன்
தில்லை அம்பலத்திற்குப்
பொன்
வேய்ந்தமை.
இவ்வாறாக வரலாற்றுப் பதிவுகள் மேலும் பல பெரியபுராணத்துள் இடம் பெற்றுள்ளன. |