4.6 காப்பிய எழில் - உவமை அழகு
ஒரு பெருங்காப்பியத்திற்கு, கற்பனை, வருணனை,
உவமை
முதலிய அணிகள் மேலும் அழகு சேர்ப்பன. பக்திக் காப்பியம்
என்பதால் சேக்கிழார் உவமைகளில் எல்லாம் பக்தி மணம்
கமழக் காண்கிறோம். வஞ்சகத்தை
உள்ளத்தில்
வைத்துக்கொண்டு, பொய் வேடம் தரித்து வந்தவனை,
|
மைபொதி விளக்கே என்ன
மனத்தினுள்
கருப்பு வைத்து |
 |
(473)
|
வந்ததாகப் பாடுகிறார் சேக்கிழார். இறைவனைக் கண்ட கண்ணப்பர்
அவரை விட்டு நீங்காத தன்மையை
|
வங்கினைப்
பற்றிப் போகா
வல்
உடும்பு என்ன நீங்கான் |
 |
(765)
|
(வங்கு = பொந்து)
என உடுப்பின் தன்மையாக ஒப்புமை காட்டுகிறார். இவ்வாறான உலகியல்
கலந்த உவமைகள் பல இந்நூலுள் இடம் பெற்றுள்ளன.
|