இந்தப் பாடம் என்ன
சொல்கிறது?
|
சங்க காலத்திற்கும்
முற்பட்ட பழந்தமிழ்
நூலாகிய
தொல்காப்பியத்தில்
திருமாலைப்
பற்றிய குறிப்புகள்
இடம் பெறுவதையும் முல்லை நில மக்கள் திணைக்
கடவுளாகத் திருமாலைக் கொண்டதையும் சான்றுகள்
வழி விளக்குகிறது.
சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை, பத்துப்பாட்டு
ஆகியவற்றில் திருமாலின் புகழ்
குறிப்பிடப்பட்டிருப்பதும் திருமாலின் அவதாரங்கள் சில
இடம்பெற்றிருப்பதும் சுட்டிக் காட்டப்படுகின்றன.
அறநூல்களுள் திரிகடுகம் திருமாலின்
திருவடிச்
சிறப்பையும் அவதாரச் சிறப்பையும் விளக்குவதை
எடுத்துரைக்கிறது.
காப்பியங்களுள் சிலப்பதிகாரத்தில் திருமாலின்
கிடந்த
கோலமும் நின்றகோலமும் விளக்கம் பெறுவதையும்
குறிக்கிறது. மணிமேகலையில் திருமாலின் அவதாரம்
பேசப்படுவதையும் குறிக்கிறது. |