2.5 ஆழ்வார் பிரபந்தங்கள் பெயர்க் காரணம்

1.
முதல் குறிப்பால் பெயர் பெற்றவை
   
 
1.
திருப்பல்லாண்டு
2.
அமலனாதிபிரான்
3.
கண்ணி நுண் சிறுத்தாம்பு
   
2.
அந்தாதித் தொடையால் பெயர் பெற்றவை
   
 
1.
முதல் திருஅந்தாதி
2.
இரண்டாம் திருஅந்தாதி
3.
மூன்றாம் திருஅந்தாதி
   
3.
முதற் குறிப்பாலும் அந்தாதித் தொடையாலும்
   
 
1.
நான்முகன் திருஅந்தாதி
   
4.
பாடியவர்களால்
   
 
1.
பெரியாழ்வார் திருமொழி
2.
நாச்சியார் திருமொழி
3.
பெருமாள் திருமொழி
   
5.
அளவால்
   
 
1.
பெரிய திருமொழி
2.
திருஎழு கூற்றிருக்கை
   
6.
பாவால்
   
 
1.
திருஆசிரியம்
2.
திருச்சந்த விருத்தம்
3.
திருக்குறுந்தாண்டகம்
4.
திருநெடுந்தாண்டகம்
   
7.
செயலால்
   
 
1.
திருப்பாவை
2.
திருப்பள்ளி எழுச்சி
   
8.
தன்மையால்
   
 
1.
திருவிருத்தம்
2.
சிறிய திருமடல்
3.
பெரிய திருமடல்
4.
திருமாலை
   
9.
சிறப்பால்
   
 
திருவாய் மொழி


  • மடல், அந்தாதி, மாலை, பள்ளி எழுச்சி போன்ற பிரபந்தங்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.

  • ஆழ்வார்கள் வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு குலங்களில் பிறந்தவர்கள் எனினும் பக்தி என்னும் சரடு அவர்களை இணைத்தது.

  • திருக்கோயில்களில் எழுந்தருளி இருக்கும் இறைவனின் திருமேனி அல்லது திருமூர்த்தி ‘அர்ச்சை’ என்று அழைக்கப்பட்டது. அதைப் போற்றிப் பாடுவது ‘அர்ச்சாவதார ஈடுபாடு’ எனப்பெயர் பெற்றது.

  • மனிதனைக் கொண்டாடும் காலம் மாறி, இறைவனைப் போற்றும் காலம் வரும் போது, இறைவனுக்கு மனிதப் பண்பை ஏற்றினர். மக்களுக்குத் துன்பம் வரும் போது இறைவன் துயரம் தீர்ப்பான்; அடியவர்களுக்கு அருள் வழங்குவான். எனவே மனித உருவில் அவதாரம் எடுத்து, அவன் செயல்பாட்டால் அறத்தை, தர்மத்தைக் காப்பதாகக் காட்டினர்.

  • ஆழ்வார்கள் பாடியதாக வைணவர்கள் போற்றும் திருத்தலங்கள் திவ்விய தேசம் எனப்படும். அவை 108 ஆகும். அவற்றுள் திருப்பாற்கடல், திருப்பரமபதம் (வைகுண்டம்) ஆகிய 2 நீங்கலாக 106 உள்ளன. அவற்றுள் 12 தவிர ஏனையவை (94) தமிழ்நாட்டில் உள்ளன.

  • நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தின் தனியன்கள் பிரபந்தங்களின் நோக்கத்தை, கனிச்சாறுபோலச் சுருக்கிக் காட்டும் சிறப்பிற்குரியவை.