1.
|
முதல் குறிப்பால் பெயர் பெற்றவை |
|
|
|
1.
|
திருப்பல்லாண்டு |
2.
|
அமலனாதிபிரான் |
3.
|
கண்ணி நுண் சிறுத்தாம்பு |
|
|
|
2.
|
அந்தாதித் தொடையால் பெயர் பெற்றவை |
|
|
|
1.
|
முதல் திருஅந்தாதி |
2.
|
இரண்டாம் திருஅந்தாதி |
3.
|
மூன்றாம் திருஅந்தாதி |
|
|
|
3.
|
முதற் குறிப்பாலும் அந்தாதித் தொடையாலும் |
|
|
|
|
|
|
4.
|
பாடியவர்களால் |
|
|
|
1.
|
பெரியாழ்வார் திருமொழி |
2.
|
நாச்சியார் திருமொழி |
3.
|
பெருமாள் திருமொழி |
|
|
|
5.
|
அளவால் |
|
|
|
1.
|
பெரிய திருமொழி |
2.
|
திருஎழு கூற்றிருக்கை |
|
|
|
6.
|
பாவால் |
|
|
|
1.
|
திருஆசிரியம் |
2.
|
திருச்சந்த விருத்தம் |
3.
|
திருக்குறுந்தாண்டகம் |
4.
|
திருநெடுந்தாண்டகம் |
|
|
|
7.
|
செயலால் |
|
|
|
1.
|
திருப்பாவை |
2.
|
திருப்பள்ளி எழுச்சி |
|
|
|
8.
|
தன்மையால் |
|
|
|
1.
|
திருவிருத்தம் |
2.
|
சிறிய திருமடல் |
3.
|
பெரிய திருமடல் |
4.
|
திருமாலை |
|
|
|
9.
|
சிறப்பால்
|
|
|
|
-
மடல், அந்தாதி, மாலை, பள்ளி எழுச்சி
போன்ற பிரபந்தங்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்.
-
ஆழ்வார்கள் வெவ்வேறு காலத்தில், வெவ்வேறு
குலங்களில் பிறந்தவர்கள் எனினும் பக்தி என்னும் சரடு அவர்களை
இணைத்தது.
-
திருக்கோயில்களில் எழுந்தருளி இருக்கும்
இறைவனின் திருமேனி அல்லது திருமூர்த்தி ‘அர்ச்சை’ என்று
அழைக்கப்பட்டது. அதைப் போற்றிப் பாடுவது ‘அர்ச்சாவதார ஈடுபாடு’
எனப்பெயர் பெற்றது.
-
மனிதனைக் கொண்டாடும் காலம் மாறி, இறைவனைப்
போற்றும் காலம் வரும் போது, இறைவனுக்கு மனிதப் பண்பை ஏற்றினர்.
மக்களுக்குத் துன்பம் வரும் போது இறைவன் துயரம் தீர்ப்பான்;
அடியவர்களுக்கு அருள் வழங்குவான். எனவே மனித உருவில் அவதாரம்
எடுத்து, அவன் செயல்பாட்டால் அறத்தை, தர்மத்தைக் காப்பதாகக்
காட்டினர்.
-
ஆழ்வார்கள் பாடியதாக வைணவர்கள் போற்றும்
திருத்தலங்கள் திவ்விய தேசம் எனப்படும். அவை 108 ஆகும்.
அவற்றுள் திருப்பாற்கடல், திருப்பரமபதம் (வைகுண்டம்) ஆகிய
2 நீங்கலாக 106 உள்ளன. அவற்றுள் 12 தவிர ஏனையவை (94) தமிழ்நாட்டில்
உள்ளன.
-
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்தின் தனியன்கள்
பிரபந்தங்களின் நோக்கத்தை, கனிச்சாறுபோலச் சுருக்கிக் காட்டும்
சிறப்பிற்குரியவை.
|
|