பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள்
ஆகியோரின் திருத்தொண்டையும் திருமால்மீது
அவர்கள் கொண்ட காதலையும் விவரித்துக் கூறுகிறது
இப்பாடம்.
பல்லாண்டு வாழ அருள்புரியும்
பெருமானுக்குப் பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் தாயாக
மாறிக் கண்ணனைத் தாலாட்டிப் பரவசமடைந்தவர். பிள்ளைத்தமிழ் இலக்கிய
வகை தோன்ற வித்தூன்றிய பெருமைக்கும் உரியவர்.
தொண்டர் அடிப்பொடியாழ்வாரோ திருமாலையே
சரணடைந்து அவன் நாமத்தைச் சொல்லுவதில் பெரும் பேறடைந்தவர். திருவரங்கனின்
பெருமையும் இராமாவதாரச் சிறப்பும் இவர் பாசுரங்களில் விளக்கம் பெறுகின்றன.
திருப்பாணாழ்வாரின் பாசுரங்கள்
இறைவனையே மகிழ்வித்து, நம்பாடுவான் என்ற நாமத்தை
அவருக்குச் சூட்டும்படி செய்தன.
மன்னர் பரம்பரையில் பிறந்தும்
மண்ணரசு வேண்டாது விண்ணரசை வேண்டி நின்றவர் குலசேகர ஆழ்வார். திருவேங்கடத்தான்
கருணையை எதிர்நோக்கியிருந்தவர், தானே தசரதனாகி இராமாவதாரப் பெருமையைப்
பாடி மகிழ்ந்தவர்.
இறைவன் சூட வேண்டிய மாலையைத்
தான் சூடிக் கொடுத்து, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் திருப்பாவை,
நாச்சியார் திருமொழி ஆகியவற்றை அருளிச்செய்து, ஆழ்வார்களில் ஒருவராய்
உயர்ந்து நின்றார்; மானிடர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லேன் என்று
இறைவனையே அடைந்தவள்.
மேற்கூறிய அனைத்தையும் இப்பாடம்
விரிவாகப் பேசுகிறது.
|