திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் உள்ள திருவாலி
திருநகரிக்கு அருகில் இருக்கின்ற திருக்குறையலூரில்
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர்.
இவர் அருளியவை:
1.
பெரிய திருமொழி (1084 பாசுரங்கள்)
2.
திருக்குறுந்தாண்டகம் (20 பாசுரங்கள்)
3.
திருநெடுந்தாண்டகம் (30 பாசுரங்கள்)
4.
திரு எழு கூற்றிருக்கை ( 1 பாசுரம்)
5.
சிறிய திருமடல் (40 பாசுரங்கள்)
6.
பெரிய திருமடல் (78 பாசுரங்கள்)
ஆக ஆறு திவ்வியப் பிரபந்தங்களில்
1253 பாசுரங்கள்
அருளியுள்ளார். இவற்றுள் பல யாப்பு வடிவங்களைப்
பயன்படுத்தி உள்ளார்.
திருமங்கை ஆழ்வார் பிறக்கும்
பொழுது கரிய
நிறம் உடையவராய் இருந்ததால் பெற்றோர்கள்
நீலன் என்னும் திருநாமம் சூட்டினார். சோழ
மன்னன் ஆழ்வாரின் வீரத்தைப் போற்றி,
அவரைத் திருவாலியின் குறுநில மன்னன்
ஆக்கினான்.
இவர் திருவெள்ளக் கோயிலில் குமுதவல்லியைக்
கண்டு
காதல் கொண்டார். அம்மையார், ஒருவருடம்
1008
வைணவர்களுக்கு அமுது செய்விக்க வேண்டும் எனப்
பணித்தார்.
• அடியார்களுக்கு அமுது செய்வித்தல்
அடியார்களுக்கு அமுது செய்யவே பணம் தீர்ந்தது.
சோழ
மன்னனுக்கு வரி செலுத்தப் பணம் இல்லை. அரசன்
படையுடன் வந்து திருமங்கையைச் சிறைப்பிடித்தான். காஞ்சி
வரதராசப் பெருமான் இவர் கனவில் தோன்றி,
பணம்
தருவதாகச் சொல்லி மறைந்தார். இறைவன் கொடுத்த
பணத்தில் வரி செலுத்தியதை அறிந்த மன்னன் பணத்தைத்
திருமங்கையாரிடம் திரும்பக் கொடுத்தான்.
• எட்டெழுத்து மந்திரம்
திருமங்கை, கொள்ளை அடித்தாவது அடியார்களைப் பேண
வேண்டும் என்னும் கொள்கை உடையவர் ஆனார். ஒருமுறை
பெருமான், மணக்கோலத்தில் வர, ஆழ்வார் அவர்களிடம்
இருந்த பொருள்களைப் பறித்தார். அப்பொழுது மணமகன்
காலில் உள்ள நகையைக் கழற்ற இயலாமல் பல்லால் கடிக்க,
பெருமானால், கலியன் (பலம் மிக்கவன்) என
அழைக்கப்பட்டார். அவர்களிடம் கவர்ந்த பொருள்களை
அடியாரால் எடுத்துச் செல்ல முடியவில்லை. அதற்கான
காரணத்தை அந்தணர் வடிவில் வந்த பெருமானிடம் கேட்க,
எட்டெழுத்து மந்திரம் (ஓம் நமோ நாராயணாய)
உபதேசிக்கப்பட்டு, திவ்வியப் பிரபந்தங்களை அருளும் பேறு
பெற்றார்.
திருமங்கை, தமிழ் யாப்பு
வடிவங்களைக் கவினுறக்
கையாண்டு நூல் அருளியவர்; 108 திவ்ய தேசங்களில் 85
திருத்தலங்கள் பற்றிப் பாடி உள்ளார் என்பர். திருஉருவ
வழிபாட்டில் (அர்ச்சா அவதாரம்) மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.
5.4.1 பெரிய
திருமொழி
நலம் தரும் சொல் திருக்குடந்தையைத் தொழுது
நற்பொருளை நல்ல துணையாகப் பெற்றேன்; ‘நலம் தரும்
சொல் நான் கண்டு கொண்டேன்’ எனப் பாடுகிறார்
திருமங்கையாழ்வார்.
நாடினேன்; நாடி நான் கண்டு கொண்டேன்
நாராயணா என்னும் நாமம்
(948:4)
என அச்சொல் எதுவெனக் காட்டி, பெரிய திருமொழியை
ஏக்கத்துடனும் மனநிறைவுடனும் தொடங்குகின்றார்.
• நாமப் பெருமை
நாராயணா என்ற பெயர் தரும் பயன்: திருமாலின் திருநாமம்
‘குலம் தரும்; செல்வம் தரும்; வெற்றி தரும்; அருள் தரும்;
பெற்ற தாயினும் நல்லன செய்யும்’ (956) என்று புகழ்கின்றார். ‘பரமனைப் பாடி நீர் உய்தி பெறுவீர். நம்முடைய வினைக்கு
நஞ்சுதான் கண்டீர் நாராயணா என்னும் நாமம்’ (954) என்பர். இராம, கிருஷ்ண அவதாரங்களின் பெருமையைக் கதை
போலச் சொல்லும் பாசுரங்கள் பல (978-997) உள்ளன.
இலங்கை அரக்கன் இராவணனின் தலை பத்தும் அறுத்தவன்
வாழும் இடம், இரணியனைப் பிளந்தவன், ஐம்பெரும்
பூதங்களானவன், சாளக்கிராமத்து அடிகள் எனத் திருமால்
கோயில் கொண்டுள்ள இடங்களின் திருமூர்த்தியைப்
போற்றுகின்றார் (996:1-2).
5.4.2 அவதாரங்கள்
எல்லாப்பாசுரங்களும்அவதாரங்களைச்சுட்டுகின்றன.எனினும் ‘திருமாலின்திருஅவதாரங்களில்ஈடுபடுதல்(1982-1991) பெரிய திருமொழியில் நாலாம்பத்தில் உள்ளது.
அதில் முறையே மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம்,
வாமனம், பரசுராமன், இராமன் அவதாரங்கள் மூலம்
திருமாலின் பெருமை பற்றிப் பேசுகின்றார் ஆழ்வார்.
• மானிட உறுப்புகள் பயன்
புள்ளில் (கருடன்) ஊர்ந்து திரிவான்
பொன்மலையைக்
கண்கள் காண வேண்டும். செவிகள்தொண்டர்க்கு
இனியவனைக் கேட்க வேண்டும். பேச்சு திருமாலின் பெருமை
பற்றிய பேச்சாக இருக்க வேண்டும். பாட்டு நறுந்துழாய்
மாலை அணிந்தவனை ஆர்வத்தால் பாடவேண்டும். கைகள்
சங்கேந்தும் கையானைத் தொழ வேண்டும். உள்ளம்அவனை
உள்ள (நினைக்க) வேண்டும். நெஞ்சுமலரிட்டுஅவனைநினைக்க வேண்டும் (2012-2019). நப்பின்னைக்காகஏழுஎருதுகளைவென்றவனுக்கு ஆட்படாதவர்கள் ‘மானிடவர்
அல்லர் என்று என் மனத்தே வைத்தேனே’ (2020) எனப்
பக்தியின் எல்லைக்கே சென்று விடுகின்றார்.
• இரணியன் வதம்
நரசிம்மர் கோயில் கொண்டுள்ள சிங்கவேள் குன்றம் பற்றிய
பாசுரங்கள் பத்தும் (1008-1017) நரசிம்ம அவதாரத்தை மட்டும்
பேசுகின்றன.
• இராமகாதை
காவித்துணியால்உடம்பைமூடி, சானகியைக் காதல்செய்த
இராவணனை அழித்தவன்; அனுமனைத்தூது அனுப்பியவன் (1074) என்றும், விபீடணனைச்‘செல்வ விபீடணன் (1522),
எந்தை விபீடணன் (1541)’ என்றும் போற்றுகின்றார்.
தோல்வியுற்ற அரக்கர் நிலை (1858-1877), இரணியன்
பிரகலாதன் உரையாடல், நரசிம்ம அவதாரம் (1075) பற்றியும்
பேசும் ஆழ்வார், கிருஷ்ண அவதாரத்தையும்
பாரதக்
கதையையும் இணைத்து, திவ்விய தேசப் பெருமையைப்
பாடுவது குறிப்பிடத்தக்கது.
• திருவடிச் சிறப்பு
வையம் தொழும்,
முனியை வானவ ரால் வணங்கப்படும்
முத்தினைப் பத்தர்தாம் நுகர் கின்றதோர் கனியைக் காதல் செய்து என்உள்ளங் கொண்ட
கள்வனை இன்று கண்டு கொண்டேனே
(1575:3-4)
எனச் சிக்கெனப் பிடிக்கின்றார்
ஆழ்வார்.
‘பெற்ற மக்கள் பெண்டிர் என்று இவர்கள்
பின் உதவார்
என்பது அறிந்தேன். நீ பணித்த அருள் என்னும்
ஒளி
பொருந்திய வாளை உருவி எறிந்தேன். ஐம்புலன்கள் இடர்தீர
எறிந்துவந்து நின்னடியைச் செறிந்தேன்’ (1461) என ஆன்மா
இறைவனுடன் இரண்டறக் கலக்க விழைந்த பேற்றைப்
பாடுகின்றார். பிறவிப்பிணி வேண்டேன். அந்தோ!
மனை
வாழ்க்கை தன்னை வேண்டேன் (1462). கல்லா ஐம்புலன்களும்
பாடாய்ப்படுத்துகின்றன. அவற்றிலிருந்துவிடுபட்டு உன்னைச்
சரண் அடைந்தேன். ‘சுடர்போல் என் மனத்து
இருந்த
வேதனே’ எனத் தமிழ் மாலையால் திருமாலை ஆட்படுத்திக்
கொள்கிறார் ஆழ்வார்.
• வழிபாடு: பிறவி நீங்க வழிபடல்
மக்கள் கருவில் என்னைத்
தோற்றுவிப்பாயோ'
என அஞ்சும் ஆழ்வார்
ஆற்றங் கரைவாழ்
மரம்போல அஞ்சுகின்றேன்
(2022:3)
காற்றில் அகப்பட்ட கலத்தில் உள்ளவர் மனம்போல் (கலவர்)
நடுங்குகின்றேன்(2023), பிறவிக்கண்புகச்செய்வாய்எனக்
கருதி ‘பாம்போடுஒருகூரையில்(கூட்டில்)வாழ்வதுபோலமனம்அஞ்சுகின்றது’(2024), இருபக்கமும் நெருப்பு எரிகிற
கொள்ளியில்மாட்டிக்கொண்ட எறும்புபோல் என் உள்ளம்
உருகும் (2025), இடும்பைக் குழியில்விழச் செய்வாய் என
அஞ்சி ‘வெள்ளத்திடை சிக்கிக் கொண்ட நரிக்கூட்டம் போல
(2026) என் உள்ளம் தடுமாறுகின்றது என்றெல்லாம் பிறப்பைப்
போக்க வேண்டிப்பெருமாளைக்கெஞ்சும்திருமங்கைஆழ்வார் அழகிய உவமைகளைப் பெய்து, அவற்றின் வழித்
தம் நிலையையும் உணர வைக்கின்றார்.
ஆழ்வாரின் அச்சம் பாசுரங்களைப்
படிப்போரை பக்தி
உலகுக்கு அழைத்துச் செல்லும் ஆற்றல் மிக்கவை.
வழிபாடுசெய்யும் ஆழ்வாரின் மன நிலையைக்
காட்டுவது
மேற்காட்டிய பாசுரம்.
• திருச்சாழல்
பெருமானின் எளிமையையும் உயர்வையும் இரண்டு பெண்கள்
எதிர்எதிராகக் கூறும் வினா விடையில் காட்டும் நிலையில்
அமைந்ததுதிருச்சாழல் என்னும் இலக்கியவகை. இதைத்
திருமங்கையாழ்வார்கையாள்கிறார்
(1992 -2001). இது
பக்தியைப் பரப்ப நாட்டுப்புற இலக்கிய வகை பயன்பட்டதற்குச் சான்று,
என்று பெண்கள் பாடுவதாக அமைத்துள்ளார்; பக்திப் பாடல்களைப்
பாடும்போது, எழுதப் படிக்கத் தெரியாத மக்களிடமும்
அப்பாடலைநினைவில்வைத்துப்பாடுகின்றஆற்றலும்
வாய்ப்பும் உருவாகும் வண்ணம் பாடியுள்ளார்.
• திருமங்கை நாயகி
தலைவனைப் பிரிந்த தலைவி வண்டு முதலியவற்றை நோக்கிக்
கூறுதல் (1198-1207), உடன்போக்கில் சென்ற தலைமகளைக்
குறிக்கத்தாய் இரங்குதல்(1208-1217)போன்றஅகப்பொருள்
துறையில்அமைந்தபாசுரங்கள் நாயகியாகியஆழ்வார்
இறைவன் மீது கொண்ட காதலைப் பாடுகின்றன.
மண் அளந்தவன், குடந்தை நகர் உள்ளவன்
தனக்குத்
துணையாளன்ஆகவேண்டும் (1206) எனச்சொல்லி, சிறு
வண்டைத் தன் காதல் நோய் உரைக்க வேண்டுகின்றாள்.
வெள்ளி வளைக் கைப்பற்ற பெற்ற தாயரை
விட்டு அகன்று அள்ளல் அம் பூங்கழனி அணி யாலி புகுவர் கொலோ?
எனத் திருமணத்திற்கு முன் உடன் சென்ற மகள் நிலையைச்
சொல்லி இரங்குகின்றாள்.
அகப்பொருள்துறையில்தாய், தலைவன் பெயரை அறிந்து
சொன்னதாகப்பாடல்அமையாது. ஈண்டு பக்தி இலக்கியம்,
பக்தியைப்பரப்பும்இலக்கியம்என்பதால்தாய் தலைவன்
பெயர்அறிந்துசுட்டுகிறாள். மேலும் தன் மகள் ‘கண்ணன்’
என்றும் ‘நேசன்’ என்றும் தேவதேவன் என்றும் சொல்லி,
கரும்பினைக் கண்டு கொண்டுஎன்
கண்ணிணைக் களிக்கு மாறே
(2044:4)
அரங்கனை இரண்டு கண்களாலும் கண்டதாகப் பாடுகிறார்
ஆழ்வார்.
அன்பினால் ஞான நீர் கொண்டு
ஆட்டுவன் அடியனேனே
(2046:3-4)
என்றும், மாரீசமானைக் கொன்று, மருதமரங்களை
முறித்து,
வையம்அளந்தவனை, வானில்வாழும் தேவர்களுக்கு
அமுதம் கொடுத்தவனை ‘என்னுடைச் சொற்கள்என்னும்,தூயமாமாலைகொண்டுசூட்டுவன்தொண்டனேனே’(2048:4)
என்றும் பாடுகிறார். ஏனெனில்பிறவி நீக்குவதற்கு ஆசைபெரிதும்உடையேன் என்கின்றார்.
5.4.4 திருநெடுந்தாண்டகம்
செந்திறத்த தமிழ்ஓசை வடசொல்லாகி
(2055:2)
என்றுஎல்லாம் ஆக இறைவனைக் காணும் ஆழ்வார்
மொழியாகவும்காண்பதுசிறப்பு.குலசேகரரும்(650)இருமொழியாகப்பெருமாளைக்காண்பதைத்திருமொழி
காட்டுகிறது. தலைவியின்ஆற்றாமைகண்ட தாய் இரங்கல்போன்றஅகப்பொருள்துறைகளில்அமைந்தபாசுரங்கள்உள்ளன.
திருமங்கை ஆழ்வார் தாய், தலைவி ஆகியஇருநிலைகளிலும்
தன்பக்திக்காதலைப் பொழிகின்றார். தலைவியாக (நாயகி)
இருந்துபக்திக்காதலைவெளிப்படுத்துவதில்மனநிறைவு
பெறாத அடியார்கள், மகள் நிலையைப்படைத்துக்கொண்டு,தாயாகிப்பேசுகின்றனர்என்றுகொள்ளத்தோன்றுகிறது.
அதாவதுதலைவிகூற்றைவிடத் தாய் கூற்றில் மகள் நிலைஉரைத்தல் பக்தி உணர்வை வளப்படுத்துகிறது போலும்!
நீரகத்தாய்! நெடுவரையின் உச்சி மேலாய்!
நிலாத் திங்கள் துண்டத்தாய்!
நிறைந்த கச்சி
ஊரகத்தாய்! ஒண்துறைநீர் வெஃகா உள்ளாய்!
உள்ளுவார் உள்ளத்தாய்! உலகம் ஏத்தும் காரகத்தாய்! கார்வானத் துள்ளாய்! கள்வா!
காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய்! பேராதுஎன் நெஞ்சின் உள்ளாய்
பெருமான்! உன் திருவடியே பேணி னேனே
(2059)
(நெடுவரைஉச்சி = திருவேங்கடம்,நிலாத்திங்கள்
துண்டம் = ஏகம்பர் கோயிலில் உள்ள பெருமாள், கச்சி
=
காஞ்சி, ஊரகம் = உலகளந்தார் கோவில்; நீரகம்,காரகம்,
கார்வானம் மூன்றும்உலகளந்தார்கோவிலில் உள்ள
சந்நிதிகள்,வெஃகா = சொன்ன வண்ணம் செய்த பெருமாள்கோவில், கள்வன் = காமாட்சி கோவிலின் உள்ளே உள்ளது, காவிரியின் தென்பால் மன்னு பேரகத்தாய் = திருவரங்கம்)
இப்பாசுரம் காமருபூங்கச்சியில் எழுந்து அருளும் பெருமானின்
திருத்தலங்களையும்நீக்கம்அறநிறைந்துஇருக்கும்
நிலையையும் காட்டுகின்றது.
5.4.5 திருஎழு
கூற்றிருக்கை
திருஎழுகூற்றிருக்கை என்பது தமிழ் யாப்பு வகைகளில் மிகக்
கடினமானது. இதைச் சித்திரகவி என்றும் அழைப்பர்.
கவிதைமுழுக்கமுழுக்க திருக்குடந்தைப்பிரானின்
பெருமையையும்குடந்தையின் இயற்கைக் காட்சிகளையும்
காணலாம்.
பக்தியை எண்களில் வடித்து வெளிப்படுத்தமுடியும்என்பதற்கு இப்பாசுரம் ஓர் எடுத்துக்காட்டு.
செல்வம் மல்குதென் திருக்குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க ஆடு அரவு அமளியில் அறிதுயில் அமர்ந்த
பரம! நின் அடியிணை பணிவன்
வரும் இடர் அகல - மாற்றோ வினையே
(3774:43-47)
(அரவு அமளி = பாம்புப் படுக்கை)
என்று துன்பங்களைக் களைந்து அருள் தரும்படி
பாசுரம்
நிறைவு பெறுகின்றது.
ஆழ்வார்கள்அருளிய பனுவலில்சற்று
வித்தியாசமான
நோக்குடைய - வடிவம் உடைய நூல் இப்பிரபந்தம் ஆகும்.
திருமங்கை ஆழ்வார் அருளிய சிறிய திருமடல் (3775), பெரிய
திருமடல்(3815) ஆகியவற்றைத் தனித்தனிப் பாடலாகவும்,
பாசுரங்களாகவும் (40,78),கண்ணிகளாகவும் (771/2, 1481/2) கணக்கிடும் முறை அறிஞர்கள் இடையே உள்ளது. இருப்பினும் யாப்பு விதிப்படி தனித்தனிப் பாடல்களாகக் கொள்வது சிறப்பு.
5.4.6 சிறிய
திருமடல்
தெருவில்செங்கண்மால்என்றுஒருவன்வந்தான்.எல்லோரும் என்னைஅழைக்க நான் சென்றேன்.
கைவளையும்காணவில்லைஎன்கிறாள்தலைவி.
கட்டுவிச்சியிடம் குறிகேட்க, சுளகில் சில நெல்லை வீசி
நும்மகளை நோய் செய்தவன் இவன் என வலம்புரியானின்
அவதாரப் பெருமையைத் தொகுத்துக் கூறுவது போல் மடல்
அமைந்து உள்ளது.மணிவண்ணனிடம் திருத்துழாய் மாலை
வேண்டி நிற்கின்றாள் திருமங்கை நாயகி
பேரா யிரமும் பிதற்றி -
பெருந்தெருவே
ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான்
வாரார்பூம் பெண்ணை மடல்
எனச் சிறிய திருமடல் நிறைவு
பெறுகின்றது.
5.4.7 பெரிய
திருமடல்
திருமங்கைநாயகியின்பெண்மையும் நலனும் முலையும்
மலர்மங்கைமைந்தன்கண்ணபுரத்தானுக்குஅவனுடைய
நுகர்வுக்குஉடையன.அவை அழகிய கொடிமலரின் மணம்
யாரும்நுகரப் பெறாமல் வீணாக நிலத்தில் உதிர்வது போல்
பயனற்றுப் போவதற்கு உரியது அன்று என்பதாம். தலைவியின்எழில் மூப்பு அடைவதால் குறையும். மூப்புஅடையாமல் இருக்க மருந்து அறிவார் இல்லையோ? என வினவுகின்றாள்.
காமத்தின்பால் நின்ற நாயகி,'அன்ன நடையார் அலர் ஏச ஆடவர் மேல் மன்னும்
மடல் ஊரார் என்பது ஓர் வாசகமும் தென் உரையில்
கேட்டு அறிவது உண்டு அதனையாம் தெளியோம்!மன்னும் வடநெறியே வேண்டினோம்'
எனத் தன் நோக்கைத் தெளிவு படுத்துகிறாள். உலகம் அறியப் பெருமானை நினைந்து பெண்ணை (பனை) மடல் ஊர்வேன்
என்பதாகப் பெரிய திருமடல் நிறைவடைகின்றது.
தொல்காப்பியம் பெண்கள் மடலூர்தல் (நூற்பா: 54-1) இல்லை
என்று குறிக்கின்றது. பன்னிருபாட்டியல் இறைவன் தலைவனாக
வரும்பொழுதுதலைவிமடலூர்வாள்எனப் பெண்
மடலூர்தலை இலக்கணப்படுத்துகிறது.
‘மடல்’ என்னும் அகப்பொருள் துறை ஆழ்வாருக்கு
ஓர்
இலக்கிய வகையைப் படைக்கத் துணை நின்றுள்ளது.
தலைவியிடம் தலைவன் கண்ட இன்பம்,
இறைவனிடம்
அடியார் காண்கின்றனர்.
எனவே அகப்பொருளில் தலைவி பெற்றிருந்த
இடத்தைப்
பக்திஇலக்கியத்தில் இறைவன் பிடித்துக் கொள்கின்றான்.
நாயகி நிலையில்நிற்கும்ஆழ்வார்கள்
அகப்பொருள்
தலைவன்செயலைமேற்கொண்டுஒழுகுவதாக பக்தி
இலக்கியம் காட்டுகிறது. திருமங்கை ஆழ்வார் தாம் அருளிய
6 திவ்வியப்பிரபந்தங்கள் வழி:
பல்வேறு யாப்பு வடிவங்களைப் பக்தி இலக்கியத்திற்குப்
பயன்படுத்திக் கொண்டார்.
நாட்டுப்புறப்பாடல் வகைகளைப் பின்பற்றி, பக்தி
நெறியைப் புலப்படுத்தினார்.
சித்திரகவி படைத்துப் பக்தி உலகுக்கு வளம் சேர்த்தார்.