பாடம் - 5 P20225 நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் |
நம்மாழ்வார் இறைவனாலேயே நம் ஆழ்வார் என்று அழைக்கப்பட்ட பெருமைக்குரியவர். இவர் அருளிய சுரங்கள் வேதத்தின் சாரம் எனப் புகழப்பட்டது. வேதம் செய்த மாறன் என்ற பெயரும் இவருக்கு ஏற்பட்டது. இவர் பாடிய பாசுரங்களின் பெருமை இப்பாடத்தில் பேசப்படுகிறது. மதுரகவியாழ்வார், நம்மாழ்வாரையே தெய்வமாக எண்ணிப்
போற்றியவர். அவரைத் தவிர வேறு தெய்வமில்லையென,
திருமாலைப் பாடாமல் திருமால் அடியவராகிய
நம்மாழ்வாரைப் பாடி, பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராக
எண்ணிப் போற்றப்பட்டவர். திருமங்கையாழ்வார் பாடிய ஆறு நூல்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறது இப்பாடம். சிறிய திருமடல், பெரிய திருமடல் என எழுதி மடல் இலக்கியத்திற்கு முன்னோடியாக அமைந்த பெருமைக்கு உரியவர் திருமங்கையாழ்வார். இவையனைத்தும் இப்பாடத்தில் விளக்கமாகப் பேசப்படுகின்றன. |
|