E
P20223 - முதல் மூவரும் திருமழிசை ஆழ்வாரும்


இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
  • பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் எனக் குறிப்பிடுவது
    வைணவ மரபு. இம்மூவரும் திருமாலின் மீது கொண்ட
    தீராக் காதலால் திருமாலின் அவதாரங்களையும் பல்வேறு
    அவதாரப் பெருமையையும் விளக்கி இன்பங்
    காண்கின்றனர்.

  • திருமழிசை ஆழ்வார் திருமாலிடம் கொண்ட அளப்பரிய காதலால் யாதுமாகி நின்ற திருமாலை மீண்டும் மீண்டும் கவிப்பொருளாக்கி மகிழ்கிறார்.

இவர்களின் பக்தியுணர்வால் பாசுரங்கள் தோன்றித் தமிழ்
மேலும் வளம் பெற்றதை விளக்குகிறது இப்பாடம்.



ந்தப் பாடத்தைப் படிப்பதால்என்ன பயன் பெறலாம்?
  • முதல் மூவர் என்று அழைக்கப்படும் ஆழ்வார்களை அடையாளங் காணலாம்.

  • முதல் மூவர் அருளிய அந்தாதித் தொடையில் அமைந்த
    திவ்யப் பிரபந்தங்களின் வழி அவர்கள் காட்டும் பக்திச் செழுமையைச் சுட்டிக் காட்டலாம்.

  • திருமழிசை ஆழ்வார் அருளியவற்றுள் அகப் பொருள்
    துறையில் அமைந்த பாசுரம் இருப்பதைத் தொகுத்துக் கொள்ளலாம்.

  • இந்த நான்கு ஆழ்வார்களின் அருளிச் செயல்களைப்
    பட்டியலிடலாம்.

  • சாதாரண மனிதர்கள் பயன்படுத்தும் சொற்களின் பொருள் அல்லது அகராதி காட்டும் பொருள,் பக்தி இலக்கியத்துள் பல்வேறுபட்ட பொருள்களைத் தருவதைப் பகுத்துத்
    தொகுத்துக் கொள்ளலாம்.

பாட அமைப்பு