இந்தப் பாடம் என்ன சொல்கிறது? |
- பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும்
முதலாழ்வார்கள் எனக் குறிப்பிடுவது
வைணவ மரபு. இம்மூவரும் திருமாலின் மீது கொண்ட
தீராக் காதலால் திருமாலின் அவதாரங்களையும் பல்வேறு அவதாரப் பெருமையையும்
விளக்கி இன்பங் காண்கின்றனர்.
- திருமழிசை ஆழ்வார் திருமாலிடம் கொண்ட அளப்பரிய காதலால் யாதுமாகி
நின்ற திருமாலை மீண்டும் மீண்டும் கவிப்பொருளாக்கி மகிழ்கிறார்.
இவர்களின் பக்தியுணர்வால் பாசுரங்கள் தோன்றித்
தமிழ்
மேலும் வளம் பெற்றதை விளக்குகிறது இப்பாடம். |