- பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார்,
திருப்பாணாழ்வார், குலசேகராழ்வார், ஆண்டாள்
ஆகியோரின் திருத்தொண்டையும் திருமால் மீது
அவர்கள் கொண்ட காதலையும் விவரித்துக் கூறுகிறது
இப்பாடம்.
- பல்லாண்டு வாழ அருள்புரியும் பெருமானுக்குப்
பல்லாண்டு பாடிய பெரியாழ்வார், தாயாக மாறிக்
கண்ணனைத் தாலாட்டிப் பரவசமடைந்தவர்.
பிள்ளைத்தமிழ் இலக்கிய வகை தோன்ற வித்தூன்றிய
பெருமைக்கும் உரியவர்.
- தொண்டர் அடிப்பொடியாழ்வாரோ திருமாலையே
சரணடைந்து அவன் நாமத்தைச் சொல்லுவதில் பெரும் பேறடைந்தவர். திருவரங்கனின்
பெருமையும்
இராமாவதாரச் சிறப்பும் இவர் பாசுரங்களில் விளக்கம் பெறுகின்றன.
- திருப்பாணாழ்வாரின் பாசுரங்கள் இறைவனையே
மகிழ்வித்து நம்பாடுவான் என்ற
நாமத்தைச்
சூட்டும்படி செய்தன.
- மன்னர் பரம்பரையில் பிறந்தும் மண்ணரசு வேண்டாது
விண்ணரசை வேண்டி நின்றவர் குலசேகர ஆழ்வார். திருவேங்கடத்தான்
கருணையை எதிர்நோக்கியிருந்தவர்,
தானே தசரதனாகி இராமாவதாரப் பெருமையைப் பாடி மகிழ்ந்தவர்.
- இறைவன் சூட வேண்டிய மாலையைத் தான் சூடிக்
கொடுத்து, சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார்
திருமொழி ஆகியவற்றை அருளிச்செய்து, ஆழ்வார்களில்
ஒருவராய் உயர்ந்து
நின்றார்; மானிடர்க்கென்று பேச்சுப்படில்
வாழகில்லேன் என்று இறைவனையே அடைந்தவள்.
மேற்கூறிய அனைத்தையும் இப்பாடம்
விரிவாகப் பேசுகிறது.
|