பாடம் - 3

P20243 கிறித்தவச் சிற்றிலக்கியங்கள்

பகுதி- 1

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் கிறித்தவச் சிற்றிலக்கியங்களை அறிமுகப்படுத்துகிறது. குறவஞ்சி, கலம்பகம், அந்தாதி, சதகம், அம்மானை முதலியன சிற்றிலக்கிய வகைகளாகும். ஒவ்வொரு வகைக்கும் ஒரு கிறித்தவச் சிற்றிலக்கிய நூல் தெரிந்து கொள்ளப்பட்டு அவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.



இந்தப் பாடத்தைக் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

கிறித்தவர் கையாண்ட சிற்றிலக்கிய வடிவங்கள் பற்றியும், கிறித்தவச் சிற்றிலக்கிய முன்னோடிகள் பற்றியும் அறிந்து கொள்ள இயலும். கிறித்தவச் சிற்றிலக்கியங்களின் அமைப்பு, பாடுபொருள் போன்றவற்றையும் அறிந்து கொள்ளலாம். தமிழ் பக்தி இலக்கிய மரபைக் கிறித்தவக் கவிஞர்கள் போற்றுவதையும் காணமுடியும்; தனித்தன்மைகளையும் இனம் காண முடியும்.

பாட அமைப்பு