நாவலுக்கும் சிறுகதைக்கும், நாவலுக்கும் நாடகத்திற்கும்
உள்ள ஒற்றுமை வேற்றுமைகளைப் பற்றி இனிப் பார்ப்போம். உரைநடையில் கதை கூறுவது நாவல் என்று
கூறப்பட்டாலும், உரைநடையில்
கதை கூறுவது அனைத்தும்
நாவலாகி விடுவதில்லை. உரைநடையில் கதை கூறும் இன்னும்
ஓர் இலக்கியம் சிறுகதையாகும். சிறுகதைக்கும் நாவலுக்கும்
பொதுவான பண்புகள் உள்ளன.
இரண்டிற்கும் சில வேறுபாடுகள் உண்டு.
இவ்வாறு பல்வேறு பொதுப் பண்புகளும், வேறுபாடுகளும்
கொண்டிருந்தாலும் இரண்டு இலக்கியங்களும் படைப்பிலக்கியத்
துறையில் மக்களிடம் மிகச் செல்வாக்கு
மிக்கனவாக
இன்றுவரை விளங்குகின்றன. இரண்டு இலக்கியங்களுமே வார,
மாத இதழ்கள் மூலம் மக்களிடம் மிக நெருக்கமான தொடர்பு
கொண்டு விளங்குகின்றன. கல்கியின்
பொன்னியின்
செல்வன் தொடர்கதையாக முதன் முதலில் வந்த காலத்தில்
சிற்றூர்களில் பெண்களிடம் மிகச் செல்வாக்கோடு விளங்கியது.
கல்வி அறிவுடைய பெண்கள் குறைவாக இருந்த அக்காலச்
சூழலில், பொன்னியின் செல்வனைக் கல்வி அறிவுடைய ஒரு
பெண் படிக்கப் பிறர் கேட்டுக் கொண்டிருப்பர். அதே போல்,
வீரமாமுனிவரின் பரமார்த்தகுரு கதை
தொடங்கி
ஜெயகாந்தனின் சிறுகதைகள் வரை மக்களிடம் சிறுகதைகளும்
செல்வாக்குப் பெற்றன.
பொதுவாக இவ்விரு இலக்கியங்களும் மக்களிடம் வாசிக்கும்
வழக்கத்தினை மிகுதியாக்கின. இலக்கிய உலகில் செல்வாக்கு மிக்க
இன்னும் ஓர் இலக்கியம், நாடக இலக்கியமாகும். நாடகமும் ஒரு கதையைச்
சொல்லும் இலக்கியமாகும். ஆனால் கல்வி அறிவற்ற மக்களும்,
படிக்காமல், கண்ணால் பார்த்துச் சுவைப்பதற்காக ஒரு
மேடையில் பாத்திரங்களின் வாயிலாகக் கதை நிகழ்த்தப்
பெறும். எனவே, நாடகத்திற்கு ஒரு கலையரங்கம்
தேவைப்படுகிறது. நாடகத்தில் இன்னுமொரு வகை நாடகமும்
உண்டு. இந்நாடகம் மேடை
நாடக முறையில்
எழுதப்பட்டிருந்தாலும் படிப்பதற்காகவும் உரிய நாடகமாகும்.
இந்நாடகத்தை மேடையிலும் நடிக்கலாம்; படிப்பதற்கும்
பயன்படுத்தலாம்.
நாடகத்திற்கும் நாவலுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள்:
இவ்வாறு நாவலுக்கும் நாடகத்திற்கும் இடையே பல ஒற்றுமை, வேற்றுமைகள் இருந்தாலும் இரண்டும் கதையை நடத்திச் செல்வதையே அடிப்படையாகக் கொண்டவை. நாவலில் பல இடங்களில் நாடகத் தன்மைகள் நிறையக் காணப்படும். பாத்திரங்களின் உரையாடல்கள் நாடக முறையிலே அமைக்கப்பட்ட தொடக்க கால நாவல்களை நாம் அறிவோம். பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் போன்ற நாவல்கள் நிறைய நாடகக் கூறுகளை கொண்டவை ஆகும். |