இந்தப் பாடம் நாவல் படைத்தல் என்ற
தலைப்பில்
நாவலின் உருவாக்கம் பற்றிச்
சொல்கிறது. நாவலை
உருவாக்கும் அகப்புறச் சூழல்களைக் கூறுகிறது. கதைக்
கருவைத் தேர்ந்தெடுக்கும் முறையையும் கூறுகிறது. நாவலின்
தொடக்கம் முதல் முடிவு வரை நாவல் அமைய வேண்டிய
முறையைக் கூறுகிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?
நாவல் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதைத்
தெரிந்து கொள்ளலாம்.
கதைக் கருவை எவ்வாறு தேர்வு செய்வது என்பதை
அறிந்து கொள்ளலாம்.
கதையை நாவலாகக் கூறும் உத்திகளைப் புரிந்து
கொள்ளலாம்.