5.4 மணிப்பிரவாள
உரைநடை |
நாலாயிரத்
திவ்விய பிரபந்தம் வைணவர்க்கு
வேதமாகும். வைணவ உரையாசிரியர்கள் இந்நூலுக்கு எழுதிய
உரை மணிப்பிரவாளம் என்று வழங்குகிறது. முத்தும் பவளமும்
கலந்து கோத்த மாலை போல (மணி: முத்து; பிரவாளம்:
பவளம்) வடசொல்லும் தமிழ்ச் சொல்லும் கலந்து எழுதிய
உரைநடை என்பது பொருள். வைணவ உரையாசிரியர்களின்
வடமொழிப் புலமையும், மோகமும் மணிப்பிரவாள நடை
தோன்றிய காரணங்களில் ஒன்றாகும். |
நம்மாழ்வாரின்
திருவாய் மொழி உரைக்கு முதலில்
மணிப்பிரவாள நடை தோன்றியது. தொடர்ந்து திவ்விய
பிரபந்தம் முழுவதுக்கும் உரை வகுக்கப்பட்டது. |
ஆழ்வார்களின்
பாடலுக்கு உரை இயற்றிய வைணவப்
பெரியோர்கள் தாம் கற்ற கலைகள் அனைத்தையும் தம்
உரைகளில் வழங்கிச் சென்றுள்ளனர். |
வைணவ உரையாசிரியர்களின்
உரைநடை பேச்சு நடையில்
அமைந்தது. கொச்சை வார்த்தைகள் நிறைந்தது. கணக்கற்ற
பழமொழிகள், மரபுத் தொடர்கள், நாட்டுப்புறக் கதைகள்
ஆகியவற்றை இவர்கள் உரைநடையில் காணலாம். |
திருக்குருகைப்
பிரான்பிள்ளான், நஞ்சீயர், நம்பிள்ளை
பெரியவாச்சான் பிள்ளை, வடக்குத் திருவீதிப் பிள்ளை,
மணவாள மாமுனிகள் எனப் பலர் மணிப்பிரவாள உரைநடையில்
எழுதினர். இவர்களில் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான
(உரை) சக்கரவர்த்தி என்றழைக்கப்படுகிறார். |
பெரியவாச்சான்
பிள்ளையின் மணிப்பிரவாள நடைக்குச்
சான்றாக, |
''ஆஸ்ரிதர்க்குத்
தஞ்சமான ஸௌலப்யத்தையும் மிடுக்கையுங்
கண்டால் நீரிங்ஙனே அஞ்சக் கடவீரோ? என்ன, அது என்னால்
வருகிறதன்று, உன் வடிவின் வைலக்ஷண்யத்தாலே வருகிறது''
என்ற பகுதியை அறிவதன் மூலம், மணிப்பிரவாள உரை
நடையின் தன்மையை நாம் விளங்கிக் கொள்ளலாம். |
வைணவ உரையாசிரியர்களின்
உரையில், ஒரு பாடலுக்கு
உரைகேட்டு விட்டால் மனம் வேறு ஒன்றில் செல்லாது என்பார்
உ.வே.சாமிநாதய்யர். |