5.5 தொகுப்புரை |
மொழியின் வளர்ச்சிக்குக்
காரணமாக அமையும் உரைநடை,
தமிழ் மொழியிலும் கவிதையுடன் பிறந்தது. அதற்கு உரைகூறும்
விதமாக வளர்ந்தது. தொடக்க கால உரைநடை, கவிதையிலிருந்து
பெரிதும் வேறுபடாமலிருந்தது. |
கல்வெட்டுகளில்
எழுதப்பட்ட உரைநடை மக்கள் பேசும்
பேச்சு மொழியிலேயே அமைந்திருந்தது. சிறுசிறு வாக்கிய
அமைப்புகளுடன் உரைநடை அமைந்திருந்தது. |
தொல்காப்பியம்
உரைநடைக்கு இலக்கணம் வகுத்தது.
நான்கு வகை உரைநடைகளைக் கூறியது. |
சங்க காலத்தில்
செய்யுள்களின் கீழ், செய்யுளைப் புரிந்து
கொள்ளும் விதமான குறிப்புகள் உரைநடையில் எழுதப்பட்டன.
அந்த உரைநடை கற்றோர் மட்டுமே அறியும்படி
அமைந்திருந்தது. |
உரையிடையிட்ட
பாட்டுடைச் செய்யுளாக அமைந்த
சிலப்பதிகாரந்தான் தமிழ் உரைநடையின் ஆரம்ப வடிவத்தைக்
காட்டுகிறது. இசை, நாடகப் பகுதிகளில்தான் உரைநடை
மிகுதியாக உள்ளதால், இசை, நாடகத்தை ஒட்டியே உரைநடை
பிறந்திருக்கலாம் என்பர். |
உரை என்னும் முறையில்
சிறப்புப் பெற்ற இறையனார்
களவியல் உரை, கவிதையிலிருந்து உரைநடை வேறுபட்டது
என்பதை உணர்த்தும் முதல் நூலாகும். வினா-விடை நடையில்
உரைநடையின் தன்மை அமைந்துள்ளதையும் காணலாம்.
இதேபோல் பாரத வெண்பா உரைநடையும் எளிமையுடன்
அமைந்துள்ளது. |
உரையாசிரியர்கள்
தமிழ் உரைநடை வளர்ச்சிக்குப்
பெரும்பங்கு ஆற்றியுள்ளனர். |
இளம்பூரணர் உரைநடை
- நூற்பா விளக்கம், தெளிவுரை,
தொடர் விளக்கம், மேற்கோள் விளக்கம் என்னும் சிறப்புக்கள். |
சேனாவரையர் உரை
- மாணவர்களுடன் நேரில் பேசுவது
போல் அமைந்த கடுமையான உரைடை. |
பேராசிரியர் உரைநடை
- சிறு சிறு வாக்கியங்களில்
அமைந்தது. |
பரிமேலழகர் உரைநடை
- தேவையற்ற சொற்கள் இல்லாத
தன்மை. |
அடியார்க்கு நல்லார்
உரைநடை - உணர்ச்சி மிகுந்த
தன்மை. |
நச்சினார்க்கினியர்
உரைநடை - சான்றுகள் நிறைந்த
தன்மை. |
தெய்வச்சிலையார்
உரைநடை - புதிய சிந்தனைகள் தரும்
தன்மை. |
சங்கரநமச்சிவாயர்
உரைநடை - மேற்கோள்கள் நிறைந்த
தன்மை |
தமிழும் வடமொழியும்
கலந்த மணிப்பிரவாள நடை
பிற்காலத்தில் வைணவ உரையாசிரியர்களால் வளர்ந்தது.
சமணர்கள் நடையும் தொடக்கத்தில் மணிப்பிரவாள நடையாக
அமைந்தது. |
தொன்மைக்
கால உரைநடை இவ்வாறான தன்மைகளுடன்,
மேலைநாட்டார் வந்த காலம் வரை அமைந்திருந்தது. |