ஒரு சொற்றொடரில் வேற்றுமைப்
பொருளில் சொற்கள்
புணர்வதை வேற்றுமைப் புணர்ச்சி என்பர்.
(எ.டு) கம்பன் பாடினான்.
கம்பனைப் பாடினான்.
கம்பனோடு பாடினான்.
முதல்சொற்றொடரில் கம்பன் என்னும் பெயர்
எழுவாயாக
உள்ளது . இரண்டாம் சொற்றொடரில்
அப்பெயர் ‘ஐ’
என்னும் வேற்றுமை உருபு ஏற்றதால் செயப்படுபொருளாக
மாறிவிட்டது; மூன்றாம் சொற்றொடரில்
‘ஓடு’ என்னும்
உருபு சேர்ந்ததால் உடன்நிகழ்ச்சிப் பொருளாக
அப்பெயர்
மாறியது. இவ்வாறு ஒரு பெயர் பல்வேறு
பொருளைத்
தருவதாக மாறுவதற்குக் காரணம் அப்பெயருடன் சேரும் ஐ,
ஓடு முதலிய உருபுகள் ஆகும்.
இவ்வுருபுகள்
பெயரை வேறுபடுத்துவதால் ‘வேற்றுமை
உருபுகள்’
எனப்படுகின்றன. வேற்றுமை உருபுகள்
ஆறு ஆகும்.
- வேற்றுமை உருபுகள்
வேற்றுமை உருபுகள் பெயர்களையும் அவற்றின்
உருபுகளையும் இனிக் காணலாம்.
| 1) |
இரண்டாம் வேற்றுமை |
- |
ஐ |
| 2) |
மூன்றாம் வேற்றுமை |
- |
ஆல், ஆன், ஒடு, ஓடு |
| 3) |
நான்காம் வேற்றுமை |
- |
கு |
| 4) |
ஐந்தாம் வேற்றுமை |
- |
இன், இல் |
| 5) |
ஆறாம் வேற்றுமை |
- |
அது, ஆது |
| 6) |
ஏழாம் வேற்றுமை |
- |
கண் |
வேற்றுமை உருபுகள் வெளிப்படையாகவும் வரும்; மறைந்தும்
வரும். எவ்வாறு வந்தாலும் அவ்வேற்றுமைப் பொருளை
அப்பெயருக்குத் தரும்.
(எ.டு) பாடம் படித்தான்
பாடத்தைப் படித்தான்.
முதல் சொற்றொடரும்
இரண்டாம் சொற்றொடரும்
ஒரே பொருள் தருவதைக் காணலாம். முதல்
சொற்றொடரில்
பாடம் என்னும் பெயரில் ' ஐ' உருபு மறைந்து வந்துள்ளது.
அதனால் அச்சொற்றொடரை இரண்டாம் வேற்றுமைத்தொகை
நிலைத்தொடர் என்பர். இரண்டாம் சொற்றொடரில்
பாடம்
என்னும் அப்பெயரில், 'ஐ' என்னும் வேற்றுமை
உருபு,
வெளிப்படையாக வந்துள்ளது. இதனை
இரண்டாம்
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் அல்லது வேற்றுமை விரி
என்பர்.
வேற்றுமைத் தொடர் தழுவு தொடராயும் தழாத் தொடராயும்
வரும்.
(எ.டு) பால் குடம் (பாலை உடைய குடம்)
பால் குடித்தான் (பாலைக் குடித்தான்)
‘பால் குடம்’ என்பதற்கு
என்ன பொருள்? ‘இக்குடம்
பாலை உடையது’ என்பதே பொருள். பால் என்பது குடத்தைத்
தழுவாமல் உடைய என்பதைத் தழுவி உள்ளதைத் அத்தொடர்
்காட்டுகிறது. எனவே இத்தொடர் தழா
தொடர் ஆகும்.
பால் என்பது குடிக்கப்படும் பொருள். எனவே இரண்டாம்
தொடரில் உள்ள வினைமுற்றான ‘குடித்தான்’ என்பதைப் பால்
தழுவி வந்துள்ளது. எனவே இத்தொடர் தழுவு தொடர் ஆகும்.
|