|
எச்சத் தொடர்மொழி என்பது, பொருள் முடிவு பெறாது
முற்றுத்
தொடர்மொழிக்கு உறுப்பாக வரும் தொடராகும்.
(எ.டு.) யானைத் தந்தம்
ஓடிய குதிரை
இவ்விரு தொடர்களும் எதற்காகக் கூறப்பட்டன
என்னும்
விளக்கம் பெறாமல் பொருள் எஞ்ச
நின்றன. ‘யானைத்
தந்தத்தை’ப் பற்றியும், ‘ஓடிய குதிரையை’ப்
பற்றியும்
கூறவேண்டிய காரணம் என்ன என்னும்
வினாவிற்கான
விடைப் பொருள் எஞ்சி நிற்க இத்தொடர்கள் அமைந்துள்ளன.
|