| 1.5 வாக்கிய வகைகள் | ||||||||||||||||||
| கருத்து
முற்றுப் பெற்ற சொற்றொடர் வாக்கியம் எனப்படும் என்பது மேலே குறிப்பிடப்பட்டது. இவ்வாக்கியங்களைக் கருத்து அடிப்படையிலும் அமைப்பு அடிப்படையிலும் வினை அடிப்படையிலும் வகைப்படுத்தலாம். |
||||||||||||||||||
| 1.5.1 கருத்து வகை | ||||||||||||||||||
| கருத்து வகையில் வாக்கியங்கள் நான்கு வகைப்படும்.
அவை 1) செய்தி வாக்கியம் 2) கட்டளை வாக்கியம் 3) வினா வாக்கியம் 4) உணர்ச்சி வாக்கியம் செய்தி வாக்கியம் என்பது, கூற வந்த செய்தியைத் தெளிவாகக் கூறுவதாகும். (எ.டு) திருவள்ளுவர் திருக்குறளை எழுதினார். கட்டளை வாக்கியம் என்பது, முன்னால் நிற்பவரை ஒரு செயலைச் செய்ய ஏவுவதாகும். (எ.டு) திருக்குறளைப் படி வினா வாக்கியம் என்பது, ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமைவதாகும். (எ.டு.) திருக்குறளை எழுதியவர் யார்? உணர்ச்சி வாக்கியம் என்பது, வியப்பு, அச்சம் முதலிய உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதாக அமைவதாகும். (எ.டு) என்னே ! திருக்குறளின் பொருட் சிறப்பு. |
||||||||||||||||||
| 1.5.2 அமைப்பு வகை | ||||||||||||||||||
|
வாக்கியங்களை
அமைப்பு வகையில் மூன்று வகையாகப் |
||||||||||||||||||
| 1.5.3 வினை வகை | ||||||||||||||||||
|
வாக்கியங்களில் வினைகள், முற்றாகவோ எச்சமாகவோ
3) தன்வினை / பிறவினை வாக்கியங்கள்
முதல் வாக்கியத்தில் பாரி என்னும் எழுவாய் உண்ணும் செயலைச் செய்வதால் அது தன்வினை வாக்கியமாகிறது. இரண்டாம் வாக்கியத்தில் உண்ணும் செயலை வேறு யாரோ செய்ய எழுவாய் துணைசெய்வதாக உள்ளதால் அது பிறவினை வாக்கியமாகிறது. |