|
சங்க காலத்தில் (கிமு. 3-ஆம் நூற்றாண்டு - கி.பி.
3-ஆம் நூற்றாண்டு ) தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்கள்
வரிசையில் பாண்டிய மரபினரும் திகழ்ந்தனர் என்பதை முன்னர்க்
கண்டோம். கி.பி. 3-ஆம் நூற்றாண்டின் மத்தி்யில் களப்பிரர்
என்போர் மதுரையைக் கைக்கொண்டு ஆளத் தொடங்கினர்
என்பதையும் அறிந்தோம். இதற்குப் பிறகு
(300
ஆண்டுகளுக்குப்பின்) ஏறத்தாழ கி.பி. 550-இல் மீண்டும்
பாண்டியர்கள் எழுச்சி பெற்று, தென் தமிழகத்தை ஆளத்
தொடங்கினர். இடையிடையே மற்ற மரபு அரசர்களின்
தாக்குதல்களால் பாண்டியர் வலிமை குன்றினாலும் கி.பி.1650-ஆம்
ஆண்டு வரை பாண்டியர் ஆட்சி தொடர்ந்தது. இக்கால
கட்டத்தை
(1) முற்காலப் பாண்டியர் ஆட்சி (கி.பி. 550 - 1000)
(2) இடைக்காலப் பாண்டியர் ஆட்சி (கி.பி. 1000 - 1200)
(3) பாண்டியப் பேரரசு (கி.பி. 1200 - 1371)
(4) பிற்காலப் பாண்டியர் ஆட்சி (கி.பி. 1371 - 1650)
என நான்கு பகுப்புகளாகக் காணலாம்.
பாண்டியர் தென்பாண்டி நாட்டை ஆட்சி செய்த
காலத்தில்
தமிழகத்தில் பிற மரபு மன்னர்களின் ஆட்சியும் ஆங்காங்கே
தொடர்ந்தன.
|