இக்கால கட்டத்தில் நாடகக் குழுக்களின் செம்மையான
காலம் செல்லச் செல்லக் குழுக்கள் ஒவ்வொன்றும் புதுப்புது
இக்காலகட்ட நாடகங்கள் புதுமையான கதையமைப்பில் தேவதாசி எதிர்ப்பு, வரதட்சணை எதிர்ப்பு, சமுதாயச் சீரழிவுகளைப் படம்பிடித்தல், மொழியின் மாண்பு உணர்த்தல், விடுதலை வேட்கைக்கு வித்திடல், நாட்டு வரலாறு, மன்னர் வரலாறு, தியாகிகள் வரலாறு, வீரவரலாறு போற்றுதல் போன்ற நிலைகளில் புதிய கதையமைப்புகளுடன் நாடகங்கள் படைக்கப் பெற்றன. சான்றாக, முள்ளில்ரோஜா (ப.நீலகண்டன்) தேவதாசி முறையை எதிர்க்கத் துணிந்தது. இராசேந்திரா, இராசாம்பாள் (கந்தசாமி முதலியார்) போன்றன சமுதாயச் சீர்திருத்த நாடகங்களாக உருவாயின. தமிழ்ச்செல்வம் நாடகம் தமிழ் மொழியின் பெருமை பேசியது. இமயத்தில் நாம் (ரா.வெங்கடாசலம்) தேசபக்தர் சிதம்பரனார் (சேலம் சித்தராசன்) போன்ற நாடகங்கள் விடுதலை வேட்கையை ஊட்டி நின்றன. இராசராச சோழன் (அரு.இராமநாதன்) நாடகம் மன்னர் வரலாறு போற்றியது. ஆங்கில நாடகங்கள் மற்றும் வடமொழி நாடகங்களும் தமிழில் தழுவலாகவும், மொழி மாற்றம் செய்யப் பெற்றும் வழங்கப் பெற்றன.
நாடகம் நடக்கும் கால அளவில் மிகக் கூடுதலான கவனம்
நாடகங்களில் உரிய இடங்களில் பாடல்கள் இடம்பெற்று கருத்துப் பிரச்சாரம் செய்வதற்கான கருவியாகவும் பாடல்கள் பயன்பட்டு வரலாயின. விடுதலை இயக்கக் காலத்தில் புராண நாடகங்களில் கூட வெள்ளையர் எதிர்ப்புப் பாடல்கள் பாடப் பெற்றன. இதை மக்களும் வெகுவாக ஏற்றுக் கொண்டனர். நாடகக் காட்சிகள் பாடல் மூலம் விளக்கிக் காட்டும் முயற்சியும் மேற்கொள்ளப் பெற்றது. சான்றாகப் பின்வரும் பாடல் காட்சியைப் பார்ப்போம்! தேசபக்தர் சிதம்பரனார் நாடகத்தில் இடம் பெற்ற கப்பல் கட்டும் காட்சியில்,
என்ற பின்னணிப் பாடலுடன் கப்பல் புறப்பட்டுச் சென்றது.
பொதுவாக இக்காலக் கட்டம், தமிழ் நாடக மேடைக்கு சங்கரதாசு சுவாமிகளும், பம்மல் சம்பந்த முதலியாரும் செய்த இடைவிடாத முயற்சியும், உழைப்பும் இக்காலக் கட்டத்தில் நல்ல பலனைத் தந்தன. தமிழ் நாடகங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்புக் காணப்பட்டது. ஒழுக்கம், கட்டுப்பாடு பேணப்பட்ட மேடையில் நல்ல தரமான நாடகங்கள் தமிழ் மக்களுக்குக் கொடையாகக் கிடைத்தன. நாடகக் கலைஞர்கள் நல்ல பண்புடனும், தியாக உணர்வுடனும் உருப் பெற்றனர். நாட்டு விடுதலைக்காக அவர்கள் காட்டிய ஆர்வமும் ஈடுபாடும் நடிகர்களுக்கும், மேடைக்கும் மிக்க மரியாதையைப் பெற்றுத் தந்தன. நாடக மேடையில் சமுதாயப் பொறுப்பு உணர்வு மேலிடத் தொடங்கியது. தமிழ் நாடக மேடையில் தமிழகத்தின் மரபு போற்றும் பழைய இலக்கியங்களும், தொன்மங்களும், வரலாறுகளும் நாடகமாக அரங்கேறின. அதே போன்று மேனாட்டு நாடகங்களுக்கு ஈடு கொடுக்கத்தக்க வகையில் புதிய நாடக முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. புதுவகை நாடக இலக்கியங்களும் கிடைத்தன. சமுதாய மாற்றங்களும் ஏற்பட வழி பி்றந்தது. பார்வையாளர் இன்றி நாடகம் இல்லை. தமிழ் நாடக மேடையின் புது முயற்சிக்கு மக்கள் ஆதரவளித்தனர். நல்ல நாடகங்களுக்கு நல்ல பார்வையாளர் கிடைக்கும் நிலை உருவானது. |