1. தமிழக     மக்களிடையே     விடுகதைகள்
    எவ்வெச்சூழல்களில் நிகழ்த்தப்படுகின்றன?

சிறுவர் சிறுமியர், குடும்ப உறுப்பினர்கள் கூடும்போதும்
அல்லது வயது வேறுபாடில்லாமல் பலரும் ஒன்று கூடும்
போதும் தொழில் செய்யும் போதும் விடுகதை
அமர்வுகள் நிகழும். பள்ளியில்     ஆசிரியர்கள்
மாணவர்களிடம்     விடுகதைகளைக் கூறி விடை
கேட்பதுண்டு. ஆண்-பெண் இருசாராரும் தனித்திருக்கும்
சூழலில் பாலியல் தொடர்பான விடுகதைகளைப் பரிமாறிக்
கொள்கின்றனர்.