1. நாட்டுப்புறப் பாடல்கள் எவ்வாறு மரபுவழிக் கல்வி
    நிறுவனமாகச் செயல்படுகின்றன?

    நாட்டுப்புறப் பாடல்கள்     அடிப்படைக் கணக்குத்
தேவைகளைக் கற்பிக்கின்றன. தகவல் தொடர்புச்
சாதனங்களாகச்     செயல்படுகின்றன.     சமுதாயத்தில்
வாழ்வதற்குத்     தேவையான     நன்னடத்தைகளைப்
போதிக்கின்றன. எவற்றைச் செய்யக் கூடாது எவற்றைச்
செய்யலாம் என்று தெளிவு படுத்துகின்றன.