|
(மணிநீர் = மணிபோல் தெளிந்த நீர்; அணி = அழகிய)
என
கோட்டையின் புற அமைப்பை விளக்குகிறார் வள்ளுவர்.
கோட்டையின்
சுவரும், எளிதில் ஏறமுடியாதவாறு உயரமாகவும்,
பகைவர்கள் அறிந்து கொள்ள முடியாத
எந்திர தந்திர
இரகசியங்கள் பொருந்தியதாகவும் இருக்க வேண்டும்.
காவல்
புரிய வேண்டிய வாசல் குறுகியதாகவும், பகைவர்கள்
செய்கிற எல்லா முயற்சிகளையும் தளரச்செய்யக் கூடியதாகவும்
இருப்பது கோட்டை. அது பகைவர்கள் எளிதில் அணுகாதவாறும்
அமைய வேண்டும்.
வள்ளுவர்,
கோட்டையைப் பற்றிச் சொல்லும் கருத்துகளெல்லாம்,
அவர் வாழ்ந்த காலத்திலும், அதற்கு முன்னாலேயும்,
வாழ்ந்த
அரசர்கள் தம் கோட்டையை அமைத்திருந்த
முறையை
அடிப்படையாகக் கொண்டே விளக்கிக் கூறியுள்ளார்.
தொன்மைக்காலம்
முதலே, கட்டடக்கலையில் தமிழர்கள் மிகவும்
சிறந்து விளங்கினார்கள். மன்னர்களின் கோட்டை
அமைப்பு,
தமிழர்களின் கட்டடக்கலையின் சிறப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு
என்பர். (பகைவன் எளிதில் அணுகாதவாறும் எளிதில் உள்ளே
நுழையாதவாறு அமைக்கப்பட்டிருந்ததும்,
தமிழர்களின்
கட்டடக்கலை அறிவை வெளிப்படுத்தும்.) எனவே, வள்ளுவர்
அரணைப் பற்றிச் சொல்லும் செய்திகள் அனைத்தும்,
தமிழர்
பண்பாட்டிற்குச் சிறந்த சான்றுகள்.
|