2. கல்வி எவ்வாறு ஓர் அழியாச் செல்வமாக இருக்கிறது?

ஒருவனது செல்வத்தைத் திருடலாம். ஒருவன் எழுதி வெளியிட்ட
நூல்களைக் கூட அழித்து விடலாம். ஆனால் ஒருவன் பெற்ற
கல்வியை, இன்னொருவரால், திருடவோ அழிக்கவோ முடியாது.
கற்றவன், தான் கற்ற கல்வியை அவனது மனதினுள்ளே
பதியவைத்திருப்பான். அதை யாராலும் அழிக்க முடியாது.
வள்ளுவரின் சிந்தனைகளை,     சாக்ரட்டசின் சிந்தனைகளை
யாராலாவது அழிக்க முடிந்ததா? அழிக்கும் தன்மை உடையதாக இருந்தால், இன்று வரையிலும் அவர்கள் சிந்தனைகள் உலகம்
முழுவதும் வாழ்ந்து கொண்டிருக்குமா? அவர்கள் பெற்ற அறிவு
எதனால் அமைந்தது? கல்வியால். எனவே கல்வி அழியாத செல்வம் என்கிறார் வள்ளுவர்.