3. கற்பதனால் ஏற்படும் பயன்களாக வள்ளுவர் கூறுவன
யாவை?

கல்வி ஓர் அழியாச் செல்வம். எனவே கேடு வரும்பொழுது, நம்மைப்
பாதுகாக்கும் சிறந்த செல்வம் அது.

கிணற்றில் தண்ணீர் மேலும் மேலும் ஊறிக் கொண்டிருப்பதைப்
போல, ஒருவன் கற்க, கற்க ஒருவனது அறிவு பெருகிக்கொண்டே
இருக்கும். எனவே, கல்வி கற்பதனால் இத்தகைய பயன்கள்
கிடைக்கும்.