|
காஞ்சி மறவன் ஒருவனின் வீரத்தை
எடுத்துரைப்பது
காஞ்சி அதிர்வு. காஞ்சி மறவன் ஒருவன் பகைவர்
எறிந்த வேலைத் தன் மார்பில் தாங்கினான். அஃது
உண்டாக்கிய புண்ணால் வேலைத் தாங்கும் ஆற்றல்
இழந்தான். இழந்த நிலையிலும் போரிட விருப்புற்றுத்
துடியனைக் கொட்டுமாறு ஏவினான். ஏவ, துடி
அதிர்கின்றது. இதனைக் கூறுவது ‘காஞ்சி அதிர்வு’
எனப்படும்.
|