2.5 வரைதல் |
வரைதல் எனப்படும் திருமணம் சார்ந்த சிந்தனைகளையும், அதனை
ஒட்டி நிகழும் செயல்பாடுகளையும் விளக்கி உரைத்த காரணத்தாலேயே
இவ்வியலுக்கு வரைவியல் என்னும்
பெயர் வந்தது. களவியல்
கற்பியலாக மாறுவதற்கு இடைப்பட்ட
காரண காரியமாக அமைவது
வரைவு என்னும் திருமண நிகழ்வே ஆகும். இவ்வரைவு |
(1) உடன்போக்காகச் சென்று வரைந்து கொள்ளுதல். |
(2)
உடன்போக்கு இடையில் தடைப்பட்டு, மீண்டு
வந்து தலைவன்
தன் மனையில்
வரைதல். |
(3) உடன்போக்கு இடையில் தடைப்பட்டு,
மீண்டு வந்து தலைவன்
தலைவியின்
மனையில் வரைதல். |
என மூன்று நிலைப்பாடுகளை உடையது. |
இவற்றுள் தன் மனை வரைதல் என்பதற்கு மட்டும் வகையும், விரிவுக்
கிளவிகளும்
இங்கே எடுத்துரைக்கப்பட்டுள்ளன. |
2.5.1 தன்மனை வரைதல்
|
உடன்போக்காகச்
சென்ற தலைவன் திரும்பி வருவது
மீட்சி
எனப்படும். அவ்வாறு மீண்டு வந்த
தலைவன் தலைவியைத் தன்
ஊருக்கு அழைத்துச் சென்று அங்குள்ள தன்
மனையில் திருமணம்
செய்து கொள்வது, தன்மனை வரைதல் எனப்படும். |
தன்மனை வரைதலின் வகைகள்
|
தலைவன்
தலைவியைத் தன் மனையின்கண் வரைந்துகொள்ளும்
நிகழ்ச்சியில் மூன்று உட்பிரிவுகள்
வகைகளாக அமைந்துள்ளன.
அவையாவன : |
வினாதல்
|
நற்றாய்
“நம் வீட்டிற்கு
வந்து தலைவிக்குத் திருமணம்
நடத்தும்படியாகத் தலைவனின்
நற்றாயிடம் கேட்கலாமா?” என்று
செவிலியைப் பார்த்து வினவுதல் வினாதல் எனப்படும். |
செப்பல்
|
தலைமகன்,
தலைவியைத் தன் மனையின் கண்ணேயே
மணந்து
கொண்ட செய்தியைத் தோழி செவிலிக்கும்
செவிலி நற்றாய்க்கும் என்றவாறு ஒருவர்
பிறருக்குச் சொல்லுதல் செப்பல் எனப்படும். |
மேவல்
|
தலைமகன்
தன் மனையிலேயே தலைவியை
மணந்துகொண்ட
செய்தியை ‘உன் உறவினரிடம் கூறுக’
என்று தோழிக்குக் கூறுதல்
மேவல் எனப்படும். |
தன்மனை வரைதலின் விரிவுக் கிளவிகள்
|
வினவுதல்,
செப்புதல், மேவுதல் என்னும் மூன்று
நிலைப்பாடுகளில்
நிகழ்ந்த தன்மனை வரைதலின்
விரிவுக் கிளவிகளாகப் பலவற்றை
நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுச் சொல்கிறார். அவை யாவும் தன்மனை
வரைதல் என்னும்
நிகழ்ச்சியின் வகைகளை விளக்குவன.
அவையாவன : |
(1)
தலைவியின் மணவிழாவினைத் தன் மனையின்கண்ணே காணும்
வேட்கையுடன் (விருப்பத்துடன்) நற்றாய், ''நம் மனைக்கு அழைத்து
வந்து நம் புதல்வியைத்
தலைவன் திருமணம் செய்து
கொள்ளும்படி அவனுடைய அன்னையரைக் கேட்கலாமா?'' என்று
செவிலியிடம் வினவுதல்.
|
(2) தலைவன்
தன் மனைக்கண் மணந்து கொண்ட செய்தியைச்
செவிலி தோழி வாயிலாக
அறிந்து
கொள்ளுதல். |
(3) தான் அறிந்த செய்தியைச் செவிலி நற்றாய்க்குக் கூறுதல். |
(4) தலைவன்,
தங்கள் வரைவைச் சுற்றத்தவரிடம் சொல்லுமாறு
தோழியிடம் கூறுதல். |
(5) அச்செய்தியை
"நான் முன்பே சொல்லிவிட்டேன்" என்று தோழி
கூறுதல். |
இவ்வைந்தும் தன்மனை
வரைதலின் விரிவுகள் ஆகும். |