5.0 பாட முன்னுரை

நாற்கவிராச நம்பி     இயற்றிய நம்பியகப் பொருள் என்னும் இலக்கண நூலின் இறுதி இயல் ஒழிபியல் ஆகும். முன்னர்
அமைந்த அகத்திணை இயல், களவியல் , கற்பியல், வரைவியல்
என்னும் நான்கு இயல்களிலும் சொல்லப்படாமல் விட்டுப்போன
செய்திகளைக் கூறுவதே ஒழிபியல் என்பதை முந்தைய பாடத்தின்
மூலம் அறிந்து கொண்டோம்.

ஒழிபியலில் இடம் பெறும் அகப்பாட்டு உறுப்புகள் பன்னிரண்டைப்
பற்றிய செய்திகளை முந்தைய பாடத்தில் அறிந்தோம்.

ஒழிபியலில் இடம் பெற்ற பிற செய்திகளான அகப்பாட்டினுள் வரும்
உவமைப் பொருள் - இறைச்சிப் பொருள் என்னும் இருவகைப்
பொருள்கள், அகப்புறக் கைக்கிளை, அகப்பொருட் பெருந்திணை,
அகப்புறப் பெருந்திணை, அகப்பாடல்களில் பாடப்படுவோர், வழுவும்
அமைதியும் முதலான செய்திகளை இப்பாடத்தில் காணலாம்.