இருபதாம் நூற்றாண்டில் புதுமைகளைக்
கொண்ட பழைய
மரபைப் பின்பற்றிய காப்பியங்களையும், புதுக்கவிதை போன்றபுதிய மரபைப் பின்பற்றிய காப்பியங்களையும் பற்றிப் பார்ப்போம்.
· இருபதாம் நூற்றாண்டுக் காப்பியங்கள்
பாரதியின் பாஞ்சாலி
சபதம், குயில்பாட்டு.
பாரதிதாசனின் பாண்டியன்
பரிசு, சஞ்சீவி பர்வதத்தின்
சாரல், புரட்சிக்கவி, வீரத்தாய்,தமிழச்சியின் கத்தி, இருண்டவீடு, எதிர்பாராத முத்தம்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
எழுதிய மருமக்கள்வழி மான்மியம் .
கண்ணதாசன் சங்க இலக்கியப் பாத்திரங்களைக்
கொண்டுபுனைந்த ஆட்டனத்தி ஆதிமந்தி .மாங்கனி.
முடியரசனாரின் பூங்கொடி,
வீரகாவியம்.
கவியோகி சுத்தானந்த பாரதியின் பாரதசக்தி
மகாகாவியம்.
டாக்டர் சாலை இளந்திரையனின் சிலம்பின்
சிறுநகை.
புலவர் குழந்தையின் இராவண
காவியம்.
இக்காப்பியங்களை இருபதாம் நூற்றாண்டுக்காப்பியங்களாகக்
குறிக்கலாம்.
· புதுக்கவிதைக் காப்பியங்கள்
யாப்பு வடிவத்தை உடைத்து, பாரதி, ந.பிச்சமூர்த்தி, தருமு
சிவராம், சி.மணி, வைதீஸ்வரன், பசுவய்யா
போன்றோரால்
வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் புதுக்கவிதை இயக்கம். எழுத்து இதழும், வானம்பாடி இதழும்
பெரியதாக வளர்த்தெடுத்த இப்
புதுக்கவிதைகளிலும் காப்பியங்கள் சமீப காலமாய்
அதிகம்
படைக்கப்படுகின்றன. வெண்பா,ஆசிரியப்பா, வஞ்சிப்பா போன்ற
யாப்பு வகைக்குள் இடம் பெறவில்லை
என இவற்றைப்
புறந்தள்ளிவிட முடியாத அளவுக்குப் புதுக்கவிதை இந்நூற்றாண்டு
இலக்கியமாகி உள்ளது.
பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப்
புதுக்கவிதையில்
அமைத்து வாழ்க்கை வரலாற்றுக் காப்பியம்
படைத்த
வைரமுத்துவின் கவிராஜன் கதை புதிய முயற்சி. ந.பிச்சமூர்த்தி,
சி.சு.செல்லப்பா, சிற்பி, ஞானி ஆகியோரும்
புதுக்கவிதைக்
காப்பியங்களைப் படைத்துள்ளார்னர்.
இந்தியாவின் ஒப்பற்ற இதிகாசங்களைப்
புதுக்கவிதைக்
காப்பியமாக்கிய ஆனந்த விகடன் இதழ் வாலியைக்
கொண்டு
இப்பணியைச் செய்வித்தது. கவிஞர் வாலி
இராமாயணத்தை
அவதார புருஷன் எனும்
தலைப்பில் புதுக்கவிதைக் காப்பியத்
தொடராக ஆனந்த விகடனில் எழுதினார்.அவரே மகாபாரதத்தை
ஆனந்த விகடனில் புதுக்கவிதையாய் எழுதினார்.பாண்டவர்
பூமி
என்ற தலைப்பில் அது காப்பிய
நூலாய் வெளியானது.ஸ்ரீகிருஷ்ணரின் வரலாற்றை வாலி கிருஷ்ண
விஜயம் என்ற
காப்பியமாகப் படைத்தார்.
· மொழிபெயர்ப்புக் காப்பியங்கள்
பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட
காப்பியங்களை
நாம் மொழி பெயர்ப்புக்
காப்பியங்கள் என
வகைமைக்குள்ளாக்கலாம்.
· தெலுங்கு
மனுசரிதையும் வசுசரிதையும்
தெலுங்கிலிருந்து தமிழுக்கு
மொழி பெயர்க்கப்பட்ட காப்பியங்கள் ஆகும்.
· கன்னடம்
பிரபுலிங்க லீலை
எனும் காப்பியம் துறைமங்கலம்
சிவப்பிரகாச சுவாமிகளால் (17ஆம் நூற்றாண்டு) கன்னடத்திலிருந்து
மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
· ஐரோப்பிய மொழிகள்
வெள்ளக்கால் ப.சுப்பிரமணிய முதலியார்
மில்டனின்
Paradise lost எனும் காப்பியத்தைத்
தமிழில் துறக்க நீக்கம்
என்று மொழி பெயர்த்துள்ளார்.
ஹோமரின் இலியத்தை
(Iliad) அனந்த நாராயண ஐயர்
மொழி பெயர்த்துள்ளார்.
ஹோமரின் ஒடிசியை
(Odyssey) ஓசியத்
என
அ.சிங்காரவேலு தமிழில் மொழி பெயர்ப்புக்
காப்பியமாகத்
தந்துள்ளார்.
சமஸ்கிருதத்தில் அமைந்த காதம்பரியை
ஆதிவர கவி
தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.