4.4 தொகுப்புரை

    இப்பாடம் காப்பிய வகைமையின் புதிய போக்கினைத் தகுந்த சான்றுகளுடன் விளக்கியது.

     புதிய போக்கின் இன்றியமையாமை, பல்வேறு அறிஞர்களின் புதிய கருத்து நிலைகள் ஆகியவற்றை விளக்கியது.

     பல்வேறு அறிஞர்களின் வகைமைகளை முன்வைத்து, அதில் இடம் பெறாத வகைமைகளான 20ஆம் நூற்றாண்டுக் காப்பியம்,நாடகக் காப்பியம், புதுக்கவிதைக் காப்பியம் ஆகியவற்றை விளக்கியது .

     கதைப் பாடல்களையும் காப்பிய வகைமைக்குள் கொண்டு வரலாம் என விளக்கியது.

     மொழிபெயர்ப்புக் காப்பியங்ளைக் காப்பிய வகைமைக்குள் விளக்க முயன்றது.

     இவ்வகையில் காப்பிய வகைமை புதிய போக்கை ஏற்று, இக்காலத்துப் படைப்புகளையும் தன்னுள் அடக்கிக் கொண்டு வளர்ந்து வருகிறது.
     தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

முதல் காப்பியமெனத் தமிழண்ணல் எக் காப்பியத்தைக் குறிக்கிறார்?
2.

தமிழண்ணலின் வகைமையாக்கத்தில் புதுமையானது
எது?
3.
தமிழண்ணல் வகைில் முதல் ஐந்து காப்பியங்களில்
இடம் பெற்ற சிறு காப்பியம் எது?
4.

வில்லிபாரதம், நளவெண்பா, நைடதம் ஆகியவற்றை
எவ்வகைமைக்குள் தமிழண்ணல் அடக்குகிார்?