தமிழகத்தில் பாறை ஓவியங்களில் விலங்கின ஓவியங்கள் பல
இடங்களில் கிடைத்துள்ளன. விலங்கு ஓவியங்களில் மான், மீன்,
யானை, குதிரை, ஆடு, நாய், மயில் முதலியவற்றைக்
குறிப்பிடலாம்.
மான் ஓவியமானது செத்தவரை என்னுமிடத்தில் பக்கவாட்டுக்
கோணத்தில் காணப்படுகிறது. முழுமையாக வரையப்பட்டுள்ள
இவ்வுருவமானது அடர் வண்ணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
செத்தவரை எனுமிடத்தில் மீன் உருவங்கள் நான்கு
காணப்படுகின்றன.
மீனின் உடற் பகுதிகள் அனைத்தும் வெள்ளை
நிறத்திலும் வெளிப் பகுதி சிவப்பு நிறத்திலும்
சுற்று வரைகோட்டு
முறையிலும் அமைந்துள்ளன.
பாறை ஓவியங்களில் சிறப்புடைய ஓவியமாக அமைவது குதிரை
ஓவியமாகும். இந்தியாவில் குதிரையானது ஆரியர் வருகைக்குப்
பின்னரே அறியப்பட்டது என்பர். கி.மு.1500-க்குப் பின்னரே
குதிரை பற்றிய செய்தியை அறிய முடிகிறது,
கோயம்புத்தூர் நகருக்கு மேற்கே உள்ள வெள்ளருக்கம் பாளையம் என்னும் ஊரிலும் மூன்று இடங்களில் குதிரையின் வடிவம் காணப்படுகிறது. இதில் ஓரிடத்தில் குதிரையின் மீது மனிதன் அமர்ந்து ஈட்டியைக் கையில் பிடித்து வீசுவது போல் வரையப்பட்டுள்ளது. குறிபார்க்கும் இடம் புதர் நிறைந்தது போல் காட்டப்பட்டுள்ளதால் அப்புதரிடையே உள்ள விலங்கைத் தாக்குவதாகக் கொள்ளலாம். குதிரையின் மேல் அமர்ந்துள்ள மனிதனுடைய தலைப் பகுதியானது தலைப்பாகை போன்ற அமைப்புடன் காணப்படுகிறது. இது இனக் குழுத் தலைவனைச் சுட்டுவதாகக் கருதலாம். இவ்வோவியம் அடர் வண்ணக் கலவையில் வரையப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத் தொல்பொருள் ஆய்வுத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட மல்லபாடி ஓவியங்கள் சிறப்பானவையாகும். இரண்டு மனிதர்கள் குதிரைகளின் மேல் அமர்ந்து கொண்டு இடக் கையால் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு வலக் கையில் நீளமான கம்பு போன்ற ஒரு பொருளை வைத்துப் போரிடும் காட்சியாக அமைந்துள்ளது. இவ்வோவியமானது அடர் வண்ண அமைப்பில் காணப்படுகிறது. மகாராஜாக்கடை என்னுமிடத்தில் கிடைத்துள்ள ஓவியத்தில் மனிதன் ஒருவன் குதிரையின் மீது அமர்ந்துள்ளான். அவனது தலையைச் சுற்றி அரைவட்டக் கோடு காட்டப்பட்டுள்ளது.
வெள்ளருக்கம் பாளையம் என்னுமிடத்தில் யானை மீது
மனிதன்
அமர்ந்த நிலையிலான ஓவியம்
காணப்படுகிறது. இதே
போன்ற
ஓவியம் நீலகிரி மாவட்டம் சீகூரிலும் காணப்படுகிறது.
வெள்ளை
நிறத்தில் அடர்த்தியான வண்ணப் பூச்சு
முறையில்
அமைந்துள்ளன. |
|||||||
4.2.5 மாடு | |||||||
|
|||||||
4.2.6 எக்ஸ்ரே ஓவியம் | |||||||
|
|||||||
4.2.7 பிற விலங்கினங்கள் | |||||||
மேற்கண்ட ஓவியங்கள் தவிர இன்னும் பிற விலங்கினங்களின்
உருவங்களைத் தமிழகப்
பாறை ஓவியங்களில் காண முடிகிறது.
நீலகிரி மாவட்டம் கொணவக்கரையில் ஆட்டின் வடிவம்
அடர்
வண்ணப் பூச்சு முறையில் வரையப்பட்டுள்ளது. சீகூர் எனுமிடத்தில் மயிலின் ஓவியம் கிடைத்துள்ளது. இவ் ஓவியமும் அடர் வண்ணப் பூச்சு முறையில் அமைந்துள்ளது. மல்ல சமுத்திரத்தில் வேட்டை நாய் ஒன்று தாவிய நிலையில் வரையப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் பன்றி, காட்டுப் பூனை, அன்னம் ஆகியவற்றின் உருவங்கள் தீட்டப்பட்டுள்ளன. |