தெருக்களின் ஓரங்களில் களம் அமைத்துக் கொண்டதால் இக்கலை தெருக்கூத்து எனப் பெயர் பெறலாயிற்று. தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய கலைவடிவம் இது. அறுவடைக்குப் பின்பும், கோயில் விழாக்களிலும் இவ்வகைத் தெருக்கூத்து நடத்தப் பெறுகிறது.
மேடை. வீதிகளிலும், நாற்சந்திகளிலும், கோயில்களுக்கு அருகிலும் தெருக்கூத்து மேடை அமைக்கப்படுகிறது.
தெருக்கூத்து மேடையில் தொடக்க காலத்தில் ஒளியமைப்புக்காகத் ‘தீவட்டிகள்’ பயன்படுத்தப் பெற்றன.
தெருக்கூத்தில் நடிகர்கள் ஆடியும் பாடியும் நடிப்பது வழக்கம். பொதுவாக ஒலிபெருக்கி போன்றவை தெருக்கூத்து மேடைகளில் பயன்படுத்தப்படுவதில்லை. ஓங்கிய குரலில் பாடியும், குதித்தும் நடிகர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகளை அப்படியே வாங்கிக் கொள்வதையே மக்கள் விரும்புகின்றனர். எனினும் நவீனம் என்ற பெயரில் ஒலிபெருக்கிகளும் இன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தெருக்கூத்தில் இசை முக்கியமான கூறாக விளங்குகிறது. மிருதங்கம், டோலக், ஜால்ரா, புல்லாங்குழல், ஆர்மோனியம் போன்ற இசைக்கருவிகள் பெரும்பாலும் பயன்படுத்தப் பெறுகின்றன. இவைகள் ‘பக்க வாத்தியங்கள்’ எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன.
இசைக்குழு மேடையின் பின்பக்கம் திரையை ஒட்டி,
பார்வையாளர்களைப் பார்த்து அமர்ந்திருக்கும். இசையின்
ஒலிப்பு ஓங்கிக் கேட்கும் வண்ணம் இசைக்கப்படும்.
இதனால்
பாட்டும், தாளமும் சேர்ந்து அமைவதில்லை. தாளத்தின் ஓசையும்,
கருவிகளின் ஒலியும்
பாட்டை அமுக்கி விடுகின்றன. எந்தவொரு நடத்து கலைக்கும் ஒப்பனை (make-up) மிகவும் முக்கியமானதாகும். பாத்திரங்களை வேறுபடுத்தவும், பொலிவுபெறச் செய்யவும் ஒப்பனை உதவுகிறது. தெருக்கூத்துக்கான ஒப்பனை தனித்துவம் வாய்ந்தது ஆகும். வேடத்துக்கேற்ற முக ஒப்பனை தெருக்கூத்தில் குறைந்தே காணப்படுகிறது. பொருளாதார வசதியின்மையே இதற்கான முக்கிய காரணமாகும். முகத்தில் பூசப்படும் அரிதாரம், கரிப்பொடி, காக்காப்பொன் போன்றன தாங்களாகவே தயாரித்துக் கொள்ளும் ஒப்பனைப் பொருள்களாகும். (அரிதாரம் = முகச்சாயம் ; காக்காப்பொன் = பளபளப்பான ஒருவகைப் பொடி.) ஆடைகள் மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப் பெறுகின்றன. வெல்வெட்டு, பொன், வெள்ளிச்சரிகை, பட்டு போன்றவற்றால் உடைகள் உருவாக்கப்பட்டிருக்கும். எனினும் வேடத்திற்கேற்ற ஆடைகள் அமைக்கப் பெறுவதில்லை. ஆண் வேடதாரிகள் பெரும்பாலும் நீளக்கால் சட்டை (Pant)யுடன் சரிகை தைக்கப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்துகிறார்கள். பெண் வேடதாரிகள் பெரும்பாலும் நைலான் புடவைகளைப் பயன்படுத்துகின்றனர்.
நாட்டுப்புற மக்கள், அறிமுகமான கதைகளையும், தங்களுக்கு
விருப்பமான கதைகளையும், தெருக்கூத்து மேடையில் கண்டு
களிப்பதில் விருப்பம் கொண்டவர்களாவர். எனவே
மக்களுக்கு
நன்கு அறிமுகமான தொன்மை இலக்கியங்களும்,
நாட்டுப்புறக்கதைகளும் பெரும்பாலும் தெருக்கூத்துக்கெனக்
கொள்ளப் பெறுகின்றன.
தெருக்கூத்து நீண்ட கால வழக்கினைக் கொண்டது. எழுத்து
வடிவிலான வரையறுக்கப்பட்ட உரையாடல் இல்லை. இதனால்
கூத்தின் நீளம் அதிகமாகிக் கொண்டே செல்லும் நிலை
ஏற்படுகிறது. பாடல், உரைநடை, நடனம், பேச்சு யாவும் ஒன்றாக
அமைந்த அமைப்பினைக்
கொண்டு தெருக்கூத்து விளங்குகிறது. நீதி போதனைகளை மக்களிடையே பரப்புவதும், கூத்தின் நோக்கமாக உள்ளது. எனவே கூத்துக்கதைகளில் சமகால நிகழ்வுகளும் கலைஞர்களால் இணைத்துப் பேசப் பெறுவதுண்டு. தொடக்க காலத்தில் கூத்து முடிய மாதக்கணக்கில் நேரம் எடுத்துக் கொள்ளப் பெற்றது. மக்களின் விருப்பத்திற்கேற்பக் கூத்துக் கதை வளர்க்கப்படும். மக்கள் முடிக்கச் சொன்னால் மட்டுமே கூத்து முடிக்கப் பெறும்.
்என்னும் பழமொழி கூட விடிய விடியக் கூத்து நடந்த நிகழ்வை
நமக்கு நினைவூட்டுகிறதல்லவா!
தெருக்கூத்துகளில் பாத்திரங்கள் யாவும் தனித்தனி
நடிகர்களால் நடிக்கப்பெறும். தெருக்கூத்து நடிகர்கள் உரத்த
குரலில் பாடத் தெரிந்தவர்களாவர்.
பெரும்பாலும் பெண் பாத்திர
வேடங்களையும் ஆண்களே ஏற்றுக் கொள்கின்றனர். எனினும்
பெண் வேடங்களைப் பெண்களே ஏற்றுக்கொள்வதைத்
தற்பொழுது காண முடிகிறது. தெருக்கூத்தின் நீண்ட கால அளவும், மக்களிடம் அடிக்கடி அறிமுகமான தெருக்கூத்துக் கதைகளில் ஏற்பட்ட சலிப்பும், புதிய கலை வடிவங்களின் வருகையும் தெருக்கூத்துக்கலையின் நலிவுக்கு வித்திடலாயின. ஒப்பனை, ஆடைகள், இசை போன்றவையும் பொருத்தமாக அமையாத தன்மை தெருக்கூத்தின் இயல்பு நிலையைக் குறைப்பதாக உள்ளது. இக்காலத்தில் தமிழகத்தின் வடபகுதியில் மட்டுமே செல்வாக்குப் பெற்ற கலையாகத் தெருக்கூத்துக் கலை விளங்கி வருகிறது. பிறபகுதிகளில் அவ்வப்போது மட்டுமே கூத்துகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மக்களோடு இயைந்த கலையான தெருக்கூத்து
எவ்வகையிலான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பதைப்
பார்ப்போம். |