4.3 நான்கு வகை அபிநயம்![]() |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கருத்தையோ உணர்வையோ
வெளிப்படுத்த அபிநயம் உதவும். அபிநயத்தின் மூலம் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு
உணர்த்தலாம். பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் பயன்படும். அவை
ஆகார்ய அபிநயம், வாசிக அபிநயம், ஆங்கிக அபிநயம் மற்றும் சாத்விக அபிநயம்
என்பனவாகும். இந்த அபிநயவகைகளைப் பற்றி இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். அலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும்.
முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை
பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறும். எடுத்துக்காட்டாகச் சிவனாக ஒருவர்
ஆட வேண்டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு,புலித்தோல், நெற்றியில்
திருநீறு முதலான ஒப்பனைகளைச்செய்து கொள்ள வேண்டும்.
இந்த ஒப்பனைகள் அவரைச்சிவனாக உணர்த்தும். இவ்வாறு அபிநயம் செய்வது ஆகார்ய
அபிநயம் எனப்படும்.
தமிழ், தெலுங்கு,
சமஸ்கிருதம், கன்னடம்,
மலையாளம் ஆகிய மொழிகளில் நாட்டியப் பாடல்கள்
உள்ளன. இவை செவ்விசையாகிய (classical
music)
கருநாடக இசையில் அமையும்.
பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். ‘அபிநயதர்ப்பணம்’ என்னும் நூலில் நந்திகேஸ்வரர் இந்த அபிநயம் பற்றிக் கீழ்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.
(அபிநயதர்ப்பணம்)
கம்பராமாயணத்தில் மிதிலைக் காட்சிப் படலத்தில் இதோ!
கம்பரும் இதைத் தான் சொல்கிறார். பார்க்கலாமா?
(பாடல் எண் : 572) பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள்
முதன்மையாகக் கொள்ளப்படும்.
சுவை உணர்வுகள் ஒன்பது. இதை நவரசம் என்று சொல்வர். ஒன்பான் சுவை என்றும் சொல்வர். அவையாவன: பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகும். இச்சுவைகளை மெய்ப்பாடுகளால் உணர்த்த வேண்டும். அதாவது கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல். இது சாத்விக அபிநயமாகும். பரத நாட்டியம், அபிநயம் பற்றி இதுவரை படித்த செய்திகளைக் கீழ்வரும் வரைபடங்கள் தெளிவாகக் காட்டுகின்றன. எளிதில் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள இந்த வரைபடங்கள் பயன்படும். நீங்கள் ஒருமுறை கவனத்துடன் பார்த்தால் அவற்றின் பயனை நன்கு அறிந்து கொள்ளலாம்.
|