உந்தீ என்பது உந்துதலைக் குறிக்கும். பெண்கள்
விளையாட்டுக்களில் காலை உந்தி விளையாடும் விளையாட்டு
உந்தி விளையாட்டாகும். இந்த விளையாட்டை
விளையாடும்பொழுது பெண்கள் பாடிக் கொண்டு
விளையாடுவர். அப்பாடல்கள் மூலம் தத்துவக் கருத்துகள்
விளக்கப் படுவதால் இந்நூல் திருவுந்தியார் எனப் பெயர்
பெற்றது.