இதுகாறும் கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து,
பின்வரும் செய்திகளை விளங்கிக் கொள்ளலாம்.
- துறவு நெறியை வற்புறுத்திக் கூறும் சமயம் சமணம்.
- சமண மதத்திற்கு ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட
மதம், அநேகாந்தவாத மதம், ஸியாத்வாத மதம் என்ற
பெயர்களும் உண்டு.
- சமண சமயக் கொள்கைகளைப் பரவச் செய்தவர்கள்
தீர்த்தங்கரர்கள்.
- பத்திரபாகு முனிவர் காலத்தில்தான் சமண சமயம்
தமிழ்நாட்டில் நுழைந்தது.
- தமிழ்நாட்டில் தழைத்தோங்கி இருந்த சமண சமயம் சமயப்
போர் காரணமாக வீழ்ச்சி அடைந்தது.
|
|