அன்பு நிறை மாணவர்களே! இப்பாடச் செய்திகளில்
முக்கியமானவற்றை ஒரு சில வரிகளில் சிந்தனையில்
கொள்ளுங்கள்.
புத்தரின் பெற்றோர் |
: |
சுத்தோதனர் - மாயாதேவி |
புத்தர் பிறந்த ஆண்டு |
: |
கி.மு. 563 |
புத்தர் பரிநிர்வாணம்
பெற்ற
ஆண்டு |
: |
கி.மு. 483 |
புத்தர் காணக் கூடாதவை |
: |
முதியவர், நோயாளி, பிணம், துறவி |
புத்தர் துறவு நெறிச்
செல்வார்
என்று கூறியவர் |
: |
கௌந்தஞ்ஞர் |
புத்தரின் மனைவி |
: |
யசோதை |
புத்தரின் மகன் |
: |
இராகுலன் |
- புத்தர் தம் 29ஆம் வயதில் துறவு மேற்கொண்டார்.
- புத்தர் தம் 35ஆம் வயதில் போதி ஞானம் பெற்றார்.
- பௌத்தர்கள் தொடக்கக் காலத்தில் சைத்தியங்கள்,
பீடிகைகள் ஆகியவற்றை வழிபட்டனர்.
- பௌத்தர்கள் புத்தரின் திருவுருவத்தையும் வழிபட்டனர்.
- மணிமேகலை, சம்பாபதி, கந்திற்பாவை, சதுர் மகாராஜிகர்,
சக்கன், அவலோகிதர் என்பன பௌத்தர்கள் வழிபட்ட சிறு
தெய்வங்களுள் சில.
- பௌத்த நெறிகள் அடங்கிய நூல் திரிபிடகம்.
|