2.6 தொகுப்புரை

நண்பர்களே ! இதுவரை பெரியபுராண இலக்கியச் சுவை பற்றிய சில
செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப் பாடத்தில் இருந்து என்னென்ன
செய்திகளை அறிந்து கொண்டீர்கள் என்பதை மீண்டும் ஒருமுறை
நினைவு படுத்திப் பாருங்கள்:

  • பெரியபுராண இலக்கியச் சுவை பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ள
    முடிந்தது.

  • இலக்கிய நயங்களாகக் கருதப்படும் கற்பனை, சொல்லாட்சி,
    அணிநலன்கள் ஆகியன பற்றிப் புரிந்து கொள்ள முடிந்தது. இவை
    பெரியபுராணத்தில் எவ்வாறு அமைந்து கிடக்கின்றன என்பதைப்
    பாடல்கள் வழி அறிந்து கொள்ள முடிந்தது.

  • 63 நாயன்மார்களில் ஒருவரான மெய்ப்பொருள் நாயனார்
    வரலாற்றை முழுவதும் படித்து இருப்பீர்கள்.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

மெய்ப்பொருள் நாயனார் எந்த ஊரைச் சேர்ந்தவர்? விடை

2.

நாயனார் எதனை மெய்ப்பொருள் என நம்பினார்? விடை

3.

நாயனாரின் பகைவன் யார்? விடை

4.

நாயனார் “தத்தா நமர்” என்று கூறிய நிகழ்ச்சியை விவரிக்க. விடை