4.5 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை கம்பராமாயணம் பற்றியும் கம்பரின்
கவிநயம் பற்றியும் சில செய்திகளை அறிந்திருப்பீர்கள். இந்தப்
பாடத்தில் இருந்து என்னென்ன செய்திகளை அறிந்து கொண்டீர்கள்
என்பதை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்திப் பாருங்கள்.

  • உலகமகா கவிஞர்களும் கம்பரும் கவிதையால் ஒன்றுபடும் தன்மையை அறிந்திருப்பீர்கள்.

  • ஹோமர், ஷேக்ஸ்பியர், ஸ்பென்சர், மில்டன் முதலிய உலகக்
    கவிஞர்களுக்கும் கம்பர் கவிதைகளுக்கும் உள்ள ஒற்றுமை
    நிலையை ஒப்பியல் தன்மையுடன் அறிந்திருப்பீர்கள்.

  • கம்பர் கவிதைகளில் காணப்பெற்ற சொல்லாட்சித் திறன், ஓசை நயம், வருணனைச் சிறப்பு,கற்பனை நயம் ஆகியவற்றைக் கம்பராமாயணப் பாடல்களின் துணையோடு அறிந்திருப்பீர்கள்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

வண்ணம் என்ற சொல்லின் இரு பொருளைக் குறிப்பிடுக.

விடை

2.

இராமனின் அழகிற்கு எவை உவமையாக்கப்பட்டுள்ளன?

விடை

3.

கும்பகர்ணனை எதனைக் கொண்டு இடித்து எழுப்புகின்றனர்?

விடை

4.

கோசல நாட்டில் எவை எல்லாம் இல்லை? பட்டியலிடுக.

விடை