வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட ஓவியங்களைப் பாறை ஓவியங்கள் என்னும் பாடத்தில்
கண்டோம். சங்க காலம், சங்கம் மருவிய காலம் ஆகிய காலப் பகுதிகள் பல்லவர் காலத்திற்கு முந்தியவை ஆகும். அக்காலச் சிற்ப ஓவியங்களை இலக்கியங்கள் வாயிலாகவே அறிய இயலுகிறது.
அக்காலத்தில் தமிழகக் கலைஞர்களோடு மகத நாட்டைச் சேர்ந்த தொழில் வல்லுநர்களும்,
மராட்டிய நாட்டைச் சேர்ந்த பொன் வேலை செய்பவரும், அவந்தி நாட்டைச் சேர்ந்த
இரும்பு வேலை செய்பவரும், யவன நாட்டைச் சேர்ந்த மர வேலை செய்பவரும் தமிழகத்தில்
இருந்து பணி புரிந்துள்ளனர் என்பதனை,
என்ற மணிமேகலை வரிகளால் அறியலாம். காவிரிப்பூம் பட்டினத்தில் இருந்த மாளிகைகளில் சுதைச் சிற்ப உருவங்கள் அமைக்கப்பட்டிருந்தன; இந்திர விழாவிற்கு அங்குக் கூடிய மக்கள் அச்சிற்பங்களைக் கண்டு மகிழ்ந்தனர் என்பதையும் மணிமேகலை எடுத்துரைக்கிறது. (3 : 127-131) அக்காலச் சிற்பக் கலைஞரைச் சிலப்பதிகாரம் ‘மண்ணீட்டாளர்’ (5 : 30) என்கிறது. சிவபெருமானுக்கும், திருமாலுக்கும், முருகக் கடவுளுக்கும், கொற்றவைக்கும் கோயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை சுடுமண் கொண்டு அமைக்கப்பட்டவை. பரிபாடல் மரச் சிற்பங்கள் பற்றிக் கூறுகின்றது. தமிழகத்தில் கொற்கை, அரிக்க மேடு, உறையூர் போன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்ட அகழ்வு ஆய்வுகளில் அக்காலச் சுடுமண் ஓடுகளும், சிற்பங்களும் கிடைத்துள்ளமை மேற்கண்ட கருத்திற்கு அணி சேர்ப்பதாக அமைகின்றது.
சங்க காலத்தில் ஓவியம் சிறப்பான நிலையில்
இருந்துள்ளதனைப் பல இலக்கியச் சான்றுகளால் அறியலாம். அக்காலத்தில் சுவர்களில்
ஓவியம் எழுதி வைப்பதே பெருவழக்கமாக இருந்தது. சங்க கால அரண்மனைகளில்
ஓவியக் கூடங்கள் இருந்துள்ளதனைச் “சித்திர மாடத்துத் துஞ்சிய |