பாண்டியர்கள் பல்லவர்களைப் போலச் சிற்பக் கலையில் |
||
3.6.1 சித்தன்ன வாசல் ஓவியம் | ||
புதுக்கோட்டைக்கு வடமேற்கில் பதினைந்து கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள சித்தன்ன வாசல் என்னும் ஊரில் உள்ள சமணக் குகையில் ஓவியங்கள் அமைந்துள்ளன. இவற்றைப் பல்லவரது ஓவியம் என்றே பலரும் பல காலமும் கருதியிருந்தனர். அண்மைக் காலத்தில்தான் இவை முற்காலப் பாண்டியரது காலத்தில் தீட்டப் பட்டவை எனக் கண்டறியப் பட்டுள்ளன. கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து அவனி சேகரன் என்ற சீமாற சீவல்லபன் காலத்தில் (கி.பி.830 - 862) இளங்கௌதமன் என்னும் சமண சமயாசிரியர் மண்டபத்தைப் புதுப்பித்து ஓவியங்களை வரையச் செய்திருக்கக் கூடும் என அறிகிறோம்.
இந்தக் குடைவரையின் நடு மண்டபத்தின் மேல் விதானத்தில் |
||
3.6.2 திருமலைப் புரம் ஓவியம் | ||
திருமலைப் புரம் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோயிலுக்கு அருகில் உள்ள ஊர் ஆகும். இங்குள்ள குகையின் மேற்கூரையில் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதனை 1935 ஆம் ஆண்டு ஜோவோ துப்ரயல் கண்டறிந்தார். இந்த ஓவியத்தின் பெரும்பகுதி சிதைவடைந்து உள்ளது. இவ்வோவியம் முற்காலப் பாண்டியர் காலத்தைச் சார்ந்தது. கூரையின் நடுவில் பூத கணங்கள் காணப்படுகின்றன. இவை கோடுகளால் நேர்த்தியாக வரையப் பட்டுள்ளன. பிரம்மனது உருவமும் அருகில், சிம்மத்தின் மேல் இனம் காண இயலாத ஓர் உருவமும் காணப்படுகின்றன. இவ்வோவிய உருவங்கள் ஆபரணங்கள் அதிகம் இன்றித் தீட்டப் பட்டுள்ளன. ஆண்களும் பெண்களும் கூட்டமாக வரையப் பட்டுள்ளனர். ஆண்கள் நீண்ட தாடியுடன் தோள்களின் மீது காட்டுப் பன்றியைச் சுமந்து வரும் வேடர்களாகக் காட்சி அளிக்கின்றனர். மேலும் இதில் அன்னம், கொக்கு, தாமரை மொட்டுகள் மற்றும் பூக்கள் ஆகியன தீட்டப் பட்டுள்ளன. மஞ்சள், சிவப்பு, கருப்பு, நீலம், பச்சை போன்ற வண்ணங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. |