முற்காலச் சோழர் கோயில்களில் பிரதான இறையுருவம்
நாம் ஏற்கெனவே கண்டது போல விசயாலயன் எதிரிகளை
மூவர் கோயிலானது திருச்சி மாவட்டம்
கொடும்பாளூர் என்னும்
இடத்தில் அமைந்துள்ளது. மூன்று கோயில்கள்
நடுவில் உள்ள கோயிலின் மேற்கு கிரீவ கோட்டத்தில்
தெற்கே உள்ள கோயிலில் இடம் பெற்றுள்ள கால சம்ஹாரரது
இக்கோயிலின் விமானச் சுவர்களிலும் மண்டபங்களிலும்
விமானத்தின் அதிட்டான உறுப்புகளுள் ஒன்று கண்டம். இக்கண்டத்தில் இடம்பெறும் சிற்பங்கள் கண்டச் சிற்பங்கள் ஆகும். பல்லவர் காலத்திலேயே கோயில் விமான அதிட்டான கண்டத்தில் சிற்பங்கள் செதுக்கும் வழக்கம் இருந்திருப்பினும் முற்காலச் சோழர் பெரும்பான்மையான கோயில்களில் இத்தகு கண்டச் சிற்பங்களை இடம்பெறச் செய்தனர். இவைகள் 1/2x1/2 அடி சதுர அளவினையுடையதாக இருக்கும். இச்சிற்பங்கள் பெரும்பாலும் இராமாயணம், சிவ புராணம், பெரிய புராணம், கிருஷ்ண லீலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கும். கம்பராமாயணம் தமிழில் தோன்றுவதற்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவையாக இச்சிற்பங்கள் உள்ளன. எனவே இவை வால்மீகி இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டே செதுக்கப்பட்டுள்ளன என உணரலாம். கும்பகோணம் நாகேசுவரர் கோயில் இராமாயணக் கண்டச் சிற்பங்களுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாகும்.
இவ்வூரில் உள்ள பிரம்ம புரீசுவரர் கோயிலில் தெற்குப் பக்கம்
|
||||||||||
4.2.4 புஞ்சைக் கோயிற் சிற்பங்கள் | ||||||||||
புஞ்சையில் உள்ள நல்துணை ஈசுவரர் கோயிற் சிற்பங்கள் மிகச் சிறப்பானவை ஆகும். இங்குத் தேவ கோட்டங்களில் அகத்தியர், கணபதி, தட்சிணா மூர்த்தி, பிரம்மன் மற்றும் துர்க்கை ஆகியோரின் சிற்பங்கள் இடம்பெறுகின்றன. இவற்றில் பிரம்மனது சிற்பம் பின் இரு கைகளில் அக்க மாலையும், கமண்டலமும் கொண்டு விளங்குகிறது. முன் இருகைகளில் வலக்கை அபயம் காட்டுகிறது; இடக்கை கடிஹஸ்தத்தில் (இடுப்பில் கை வைத்த நிலை) அமைந்துள்ளது. இவரது உருவச் சிலையில் பூணூல் சிறிய அளவில் அமைக்கப் பட்டுள்ளது. இச்சிற்ப அமைப்பே முற்காலச் சோழர் சிற்பக் கலைத் திறனுக்குச் சிறந்த எடுத்துக் காட்டாய் விளங்குகிறது.
|