1.5 தொகுப்புரை

தமிழ் நாடகம் மிகவும் தொன்மை வாய்ந்தது. இது தொடக்க
நிலையில் கூத்து, ஆடல் (ஆட்டம்) ஆகிய இரு நிலைகளின்
செயல்பாட்டில் இருந்து வந்துள்ளது. தமிழர் தம் வாழ்க்கை
முறையின் ஒரு கூறாக இக்கலையைக் கொண்டுள்ளனர்.

நாடகக் கலைக்கேற்ப ஆடுகளங்கள் அமைந்திருந்தன. மேலும்
திறந்த வெளி மற்றும் அடைப்பு அரங்கின் செயல்பாட்டு
நிலையையும் அறிய முடிகிறது. ஆண், பெண் இருபால்
கலைஞரும் இக்கலைகளி்ல் ஆர்வமுடன் பங்கு கொண்டிருந்தனர்.
இவ்வாறு, நாடகக் கலை தொன்மைக் காலத்தில் தமிழகத்தில்
சிறப்புற்றிருந்ததை முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1. ‘ஆடுகளம்’ என்றால் என்ன?

விடை

2. திருக்குறள் கலை நிகழும் இடத்தை எவவாறு குறிக்கிறது?

விடை

3.
சிலப்பதிகாரம் குறிப்பிடும் இருவகைப் படைப்பு
நிலைகளைக் குறி்ப்பிடுக.

விடை

4. சங்ககாலக் கலைஞர்களில் இரண்டு வகையினரைக்
குறிப்பிடுக.

விடை

5. சங்க கால இசைக்கருவிகள் ஐந்தினைக் குறிப்பிடுக.

விடை

6. சிலப்பதிகாரம் குறிப்பிடும் திரை வகைகள் எவை?

விடை