6.3 வினையாலணையும் பெயர் காலம்காட்டுதல்
பெயர்ச்சொல் காலம்காட்டாது. ஆனால்வினையாலணையும் பெயர் மட்டும் காலம் காட்டும்.
வினையாலணையும் பெயர், பெயர்ச்சொல்லைப் போன்றுவேற்றுமை உருபு ஏற்கும். வினைச்சொல்லைப் போன்று காலம்காட்டும்.
செயலைக் குறிப்பதுடன், செய்தவனையும் குறிப்பதுவினையாலணையும் பெயரின் இயல்பாகும்.
(எ.கா) | வந்தானைக் கண்டேன் |
| வந்தவன் சென்றான் |
வினையாலணையும் பெயர், வினை முற்றைப் போலவேஇருதிணை ஐம்பால் சொற்களில் காலம் காட்டுவது ஆகும்.
|